வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகளின் துப்பட்டா பறிப்பு: பெரும் பரபரப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, September 21, 2018

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகளின் துப்பட்டா பறிப்பு: பெரும் பரபரப்பு



மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் பங்கேற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த கல்லூரி மாணவிகள் சிலரின் துப்பட்டாவை போலீசார் பறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்ட அரசு விழா ஒன்றில் மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா விஷ்வ வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருசில மாணவிகள் கருப்பு நிற துப்பட்டாவை அணிந்திருந்தனர். இந்த துப்பட்டாவை முதல்வர் பேசும்போது மாணவிகள் கருப்புக்கொடி காட்ட பயன்படுத்துவார்கள் என கருதிய போலீசார் துப்பட்டாவை பறித்து வைத்து கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும் தருவதாக கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


கல்லூரி மாணவிகளின் துப்பட்டாவை போலீசார் பறித்தது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மபி மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காவல்துறையினர்களின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என பாஜக எம்.எல்.ஏ தெரிவித்திருந்தார்.

இந்த விஷயத்தில் களத்தில் இறங்கி போராட பெண்கள் அமைப்புகளும் திட்டமிட்டு வருகின்றன.

No comments:

Post a Comment