வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அவமானத்தில் கபடி பயிற்சியாளர் தற்கொலை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 17, 2018

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அவமானத்தில் கபடி பயிற்சியாளர் தற்கொலை!



13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான கபடி பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி அவமானம் தாளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் ருத்ரப்பா ஹோசாமனி (59). உடை மாற்றும் அறைக்கு வந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 9-ஆம் தேதி பெற்றோரிடம் இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் திரண்டு வந்து ருத்ரப்பாவை கடுமையாக தாக்கினர். இதையடுத்து சிறுமி சார்பில் போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது. இதனால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.(தொடர்ச்சி கீழே...)  

இதையும் படிக்கலாமே !!!


தற்கொலை
 இதையடுத்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து நேற்று அவர் தங்கினார். அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


வரவில்லை
 ஹோட்டலை விட்டு வெளியே வராததாலும் கதவு திறக்கப்படாததாலும் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் கதவை உடைத்து சென்று பார்த்த போது ருத்ரப்பா இறந்து கிடந்தது தெரியவந்தது.


தானம்
 ருத்ரப்பா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றினர். அதில் தற்கொலை செய்வதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இப்போது யார் உதவியும் இல்லாமல் உள்ளேன். அதனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. மனைவியை நன்கு பார்த்துக் கொள்ளுமாறு மகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.


விசாரணை
 தனது உடலை மருத்துவமனைக்கு தானம் செய்துவிடுமாறும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் அழுகிய நிலையில் ருத்ரப்பாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் தானம் செய்வது கடினம் என தெரிவித்துள்ள போலீஸார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment