வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நீதிபதியின் கார் மீது மோத முயற்சி: டாடா மேஜிக் வேனை ஓட்டிப் பழகிய இளைஞர்கள் 3 பேர் கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 06, 2018

நீதிபதியின் கார் மீது மோத முயற்சி: டாடா மேஜிக் வேனை ஓட்டிப் பழகிய இளைஞர்கள் 3 பேர் கைது



ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலை டாட்டா மேஜிக் வேனை ஓட்டிப்பழகிய இளைஞர்கள் நீதிபதியின் கார்மீது மோதும் வகையில் வாகனத்தை ஓட்டியும், பாதுகாவலரிடம் சண்டையும் போட்டதால் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அபிராமபுரம் ராஜா அண்ணாமலைபுரம் பக்ஸ் சாலையில் வசிப்பவர் பிரான்சிஸ் சேவியர் (35) இவர் வாடகைக்கு டாடா மேஜிக் வாகனம் ஓட்டி வருகிறார். வாகனம் எப்போதும் அவரிடமே இருக்கும். இவரது உறவுப்பையன் ராம் பிரகாஷ் (18), இவரது நண்பர் சுகுமார் (24) இவர் பட்டினபாக்கத்தில் வசிக்கிறார். ராம் பிரகாஷ், சுகுமார் இருவரும் சேவியரின் டாட்டா மேஜிக் வேனை எடுத்து ஓட்டி பழகுவர். அவ்வாறே நேற்றும் ஓட்டி பழகியுள்ளனர்.



அப்போது கிரீன்வேஸ் சாலை அமைச்சர்கள் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியிலிருந்து, ராஜா அண்ணாமலைபுரம் நோக்கி கிரீன்வேஸ் சாலையில் டாட்டா மேஜிக் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அப்போது தாசில்தார் அலுவலகம் அருகே உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா அண்ணாமலைபுரம் வழியாக கிரீன்வேஸ் சாலையில் எதிர்புறம் வந்துள்ளார்.


அப்போது டாட்டா மேஜிக் வாகனம் எதிர்சாலையில் அவர்கள் கார்மீது மோதுவதுபோல் சென்றுள்ளது. நீதிபதியின் கார் ஓட்டுநர் பிரேக் அடித்து காரை நிறுத்தியுள்ளார். நீதிபதியின் பாதுகாவலர் அவர்களை பிடித்து கேட்டுள்ளார். ஆனால் இருவரும் பாதுகாவலர்இடம் சண்டையிட்டுள்ளனர்.



இதையடுத்து அவர்களை அபிராமபுரம் போலீஸார் கைது செய்தனர். வாகன உரிமையாளர் பிரான்சிஸ் சேவியர் மீது பிரிவு 279(பொதுமக்கள் செல்லும் பாதையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டுவது), 336 (பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவது), மற்றும் ராம் பிரகாஷ், சுகுமார் இருவர் மீதும் ஐபிசி பிரிவு 75 (தகராறில் ஈடுபடுவது) 7(1)a செயல்பட விடாமல் தடுப்பது, வன்முறையில் ஈடுபடுவது. ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Popular Posts

No comments:

Post a Comment