வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு



வீட்டின் முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தடுக்க சென்ற அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 


மதுரை அனுப்பானடி தெய்வக்கன்னிதெருவை சோந்தவர் பாலமுருகன். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 20), மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு பிரவீன்குமார் அவரது நண்பர் காளியுடன் வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் பிரவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

 அதை தடுக்க சென்ற அவரது நண்பர் காளியையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரவீன்குமார் பரிதாபமாக இறந்தார். படுகயாம் அடைந்த காளி சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

அதில் பிரவீன்குமார் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வது வழக்கம். இதனால் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சைலோ கண்ணன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அடிக்கடி இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்து பிரவீன்குமாரை கண்ணன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து பிரவீன்குமார் பாட்டி வீட்டில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் பிரவீன்குமார் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு வந்த கண்ணன் பிரவீன்குமாரை பார்த்ததும் அவரிடம் தகராறு செய்தார்.
 

 பின்னர் அவர் ஆத்திரத்தில் பிரவீன்குமாரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் கண்ணன் பிரவீன்குமாரை கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்த அரசமகாராஜன்(20) என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அதில் அவர் தலையில் சிறிய காயத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் தான் கண்ணன் அனுப்பானடி பகுதிக்கு வந்து பிரவீன்குமாரை கொலை செய்துள்ளார்.
 


சைலோ கண்ணன், டோரி ராஜவேல், சோப்பு செல்வகுமார், அய்யர் பிரவின்குமார், விஜி, பாலகணேஷ், மணி, அருண் ஆகிய 8 பேரை தெப்பக்குளம், அவனியாபுரம் போலீசார் தேடி வருகிறார்கள்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment