வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எஜமானரை காப்பாற்றிய நாய்-ஹலேமக்கி கிராமத்தில் பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 24, 2018

எஜமானரை காப்பாற்றிய நாய்-ஹலேமக்கி கிராமத்தில் பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்



சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாசி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான காபித்தோட்டத்திற்கு சென்றார்.


அப்போது அவர் தான் வளர்த்து வரும் நாயையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். தோட்டத்திற்கு சென்ற பின்னர், அவினாசி வேலைகளை செய்து கொண்டிருந்தார். நாய் மட்டும் தனியாக நின்று கொண்டு அங்குள்ள ஒரு புதரை பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது.
 

இதனால் சந்தேகமடைந்த அவினாசி, நாய் ஏன் குரைக்கின்றது என புதரில் சென்று பார்த்தார். அப்போது அங்கு ஒரு நாகப்பாம்பு இருந்தது. அது உடனடியாக புதரில் இருந்து வெளியேறி அவினாசியை நோக்கி வந்து கடிக்க முயன்றது. தனது எஜமானரை, பாம்பு கடிக்க முயற்சிப்பதை அறிந்த நாய், பாம்பின் முன்பு ஓடிவந்து நின்றது. பின்னர் அது, அந்த பாம்பை கடித்து குதற சீறிப்பாய்ந்தது. (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

அப்போது அந்த பாம்பு, நாயிடம் இருந்து தப்பி மீண்டும் புதருக்குள் ஓடி ஒழிந்து கொண்டது. இந்த காட்சிகளை அவினாசி தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தன்னை காப்பாற்றிய தனது செல்லப்பிராணியான நாய் குறித்து அவினாசி அப்பகுதி மக்களிடம் பெருமையாக கூறி வருகிறார். 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment