வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆணுறுப்பை வெட்டி கொண்ட மாதானி பாபா சாமியார்.. பரபரப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

ஆணுறுப்பை வெட்டி கொண்ட மாதானி பாபா சாமியார்.. பரபரப்பு



தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லி சொல்லி பார்த்த ஒரு சாமியார் மிகுந்த மனவேதனை அடைந்து தனது ஆணுறுப்பை தானே அறுத்து கொண்டார்!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 
காம்ஸின் என்ற கிராமம் இங்கு உள்ளது. இந்த பகுதியில் மாதானி பாபா என்ற சாமியார் ரொம்ப ஃபேமஸ். 28 வயதாகிறது. இவரிடம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் நேரில் வந்து சந்தித்து ஆசி பெற்று செல்வர். ரயில் விபத்தில் 61 பேர் பலி.. பஞ்சாப் காங். அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு (தொடர்ச்சி கீழே...)  
 
இதையும் படிக்கலாமே !!!

மனவேதனை
 இந்நிலையில், மாதானி பாபா மீது அவரது உறவினர்களே பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்தியதாக தெரிகிறது. தன் உறவுக்கார பெண் மீது இப்படி கள்ளத்தொடர்பு குறித்த பழி சுமத்தப்பட்டு விட்டதால், சாமியார் மிகுந்த மன வேதனையடைந்தார். அதனால் தன் சார்பான விளக்கத்தை பலமுறை கொடுத்தும் அதனை யாரும் ஏற்கவில்லை என தெரிகிறது.


நவராத்திரி விழா 
 இதனால் இவ்வளவு நாள் தன் பெயரை களங்கம் இல்லாமல் கட்டிக் காப்பாற்றிய தனக்கு இப்படி ஒரு அவச்சொல்வந்துவிட்டதே என மனம் நொந்துபோய் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் நவராத்திரி விழாவின் போது தனது பிறப்புறுப்பை தானே அறுத்துக் கொண்டார். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியே பெரும் பரபரப்பாகிவிட்டது.



ஆசிரமம் கட்டி வருகிறேன்
 இதனையடுத்து, சாமியார் மாதானி பாபா பாம்னா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு மாதானி இதுகுறித்து சொல்லும்போது, "நான் ஆசிரமம் ஒன்றை கட்டி வருகிறேன். அதை பிடிக்காத சிலர் இப்படி தனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்கின்றனர்.


பெண்ணோடு தொடர்பு
 அதோடு, அந்த சதிகார்கள் என்னை ஒரு பெண்ணோடு தொடர்புபடுத்தி என் பெயரையும் கெடுத்துவிட்டனர்" என்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமியார் மாதானிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருவதாக மருத்துவர் பல்வீர் சிங் ஏன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment