வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சென்னை காசிமேட்டில் 300 நட்சத்திர ஆமைகள் சிக்கின விமானம் மூலம் மலேசியா கடத்த முயற்சி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 09, 2018

சென்னை காசிமேட்டில் 300 நட்சத்திர ஆமைகள் சிக்கின விமானம் மூலம் மலேசியா கடத்த முயற்சி


சென்னை காசிமேட்டில் 300 நட்சத்திர ஆமைகளை போலீசார் கைப்பற்றினர். அவற்றை விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

 
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக ராயபுரம் உதவி கமிஷனர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
அப்போது கையில் அட்டை பெட்டிகளுடன் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் அவற்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த 2 அட்டை பெட்டிகளையும் போலீசார் சோதனை செய்தபோது, அதில் 300 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அதில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் என்ற முகவரி ஒட்டப்பட்டு இருந்தது.
மலேசியாவுக்கு...

அந்த நட்சத்திர ஆமைகளை கடல் வழியாக கடத்தி வந்த மர்மநபர்கள், அதனை சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது. சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment