வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஃபுல் போதையில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்.. தற்கொலைக்கும் முயற்சி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 03, 2018

ஃபுல் போதையில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்.. தற்கொலைக்கும் முயற்சி



தன்னை காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவியின் கழுத்தை இந்தி ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்ததால் கர்னூலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்னூல் பங்காருபேட்டையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக வேலை செய்பவர் சங்கர். அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு இந்தி ஆசிரியர் சங்கர் சில மாதங்களாக தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் சங்கரை காதலிக்க மாணவி மறுத்துவிட்டார்.

மிரட்டல்
 எனினும் மாணவியின் பின்னால் சுற்றுவதை ஆசிரியர் கைவிடவில்லை. அந்த மாணவி தன் பின்னால் வந்தால் தந்தையிடம் கூறிவிடுவதாக மிரட்டினார். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
 

கழுத்தை அறுத்த ஆசிரியர்
 இதனால் ஆவேசம் அடைந்த சங்கர் இன்று காலை முழு குடிபோதையில் மாணவியின் வீட்டுக்குள் புகுந்தார். அப்போது தன்னை காதலிக்குமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். ஆனால் மாணவி மறுத்தார்.


பிளேடால் அறுப்பு
 இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அந்த மாணவி கெஞ்சியும் விடாமல் அந்த மாணவியின் கழுத்தை கதற கதற ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்தார்.


தற்கொலைக்கு முயற்சி 
மாணவியின் கூக்குரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டனர். அதே நேரத்தில் ஆசிரியர் சங்கர் தன்னிடம் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.


மருத்துவமனையில் சேர்ப்பு 
 தற்கொலை முயற்சியிலிருந்து ஆசிரியரையும் மீட்ட பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


அதிர்ச்சி தகவல்
 அறிந்து விரைந்து சென்ற கர்னூல் போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டுள்ளனர். மேலும் பாடம் எடுக்கும் ஆசிரியர் இப்படி மாணவி மேல் காதல் கொண்டு அவரது கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment