வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஷாருக்கான் வீட்டிற்கு முன்பு கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிகர்: காரணம்...
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

ஷாருக்கான் வீட்டிற்கு முன்பு கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிகர்: காரணம்...


ஷாருக்கானை நேரில் பார்க்க முடியாமல் போனதால் ரசிகர் ஒருவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த 2ம் தேதி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவில் ஷாருக்கானின் பங்களாவான மன்னத்திற்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள். தன்னை பார்க்க வந்த ரசிகர்களை நோக்கி ஷாருக்கான் கையசைத்து பறக்கும் முத்தம் கொடுத்தார்.

கவலை
  மும்பை தாராவி பகுதியை சேர்ந்த முகமது சலீம் அலாவுத்தீன் என்பவர் தனக்கு பிடித்த நடிகரான ஷாருக்கானை காண நேற்று அவரின் வீட்டிற்கு முன்பு அதிகாலை நேரம் முதலே நின்று கொண்டிருந்தார். சுமார் 3 மணிநேரம் அங்கு காத்திருந்தும் அவரை காண முடியவில்லை. இதனால் மனமுடைந்த அலாவுத்தீன் தான் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
மருத்துவமனை
 ஷாருக்கான் வீட்டிற்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அலாவுத்தீனை மீட்டு அருகில் உள்ள பாபா மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் அந்த நபரை தூக்கிச் சென்றபோது ஷாருக் சார் என்று அவர் கத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. கழுத்தை அறுத்த பிறகும் அவர் அங்கிருந்து வர மறுத்ததால் போலீசார் தூக்கிச் சென்றனர்.


ஷாருக்கான் 
 அலாவுத்தீன் செய்த காரியத்தால் ஷாருக்கானின் பங்களா உள்ள பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து மன்னத் அருகே செல்ல ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கிளப்
 முன்னதாக ஷாருக்கானின் பிறந்தநாள் பார்ட்டி நைட் கிளப் ஒன்றில் நடைபெற்றது. ஊரே தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த கிளப்பில் பாட்டு சத்தம் ஓவராக இருந்ததால் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வந்து பார்ட்டியை நிறுத்தினார்கள். போலீசார் வந்ததும் ஷாருக்கான் மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment