வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை: உண்மையை போட்டுடைத்த நடிகர்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 16, 2018

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை: உண்மையை போட்டுடைத்த நடிகர்



நடிகையும், மாடலுமான நேஹா தூபியா கர்ப்பமானதால் தான் அவசர அவசரமாக திருமணம் நடந்தது என்று அவரின் கணவரும், நடிகருமான அங்கத் பேடி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அங்கத் பேடிக்கும், நடிகை நேஹா தூபியாவுக்கும் கடந்த மே மாதம் 10ம் தேதி டெல்லியில் உள்ள குருத்வாராவில் வைத்து திடீர் திருமணம் நடந்தது.

 நேஹா கர்ப்பமானதால் தான் இந்த திடீர் திருமணம் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் அதை நேஹா மறுத்தார். இந்நிலையில் நேஹா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அங்கத் பேடி கூறியதாவது,
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கர்ப்பம் 
திருமணத்திற்கு முன்பே நேஹா கர்ப்பமாகிவிட்டார். அதனால் தான் 4 நாட்களில் அவசர, அவசரமாக ஏற்பாடு செய்து எங்களின் திருமணம் நடந்தது. நேஹாவின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரை சந்தித்து அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நான் தான் தெரிவித்தேன். திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான விஷயத்தை பெற்றோரிடம்
சொல்ல அவர் பயந்தார்.


அதிர்ச்சி 
நான் கர்ப்ப விஷயத்தை கூற நேஹாவின் வீட்டிற்கு சென்றேன். அவரின் பெற்றோர் என்னை வரவேற்று உணவு, இனிப்பு எல்லாம் கொடுத்தார்கள். சாப்பிட்ட பிறகு பீர் குடித்து முடித்துவிட்டு நேஹாவின் கர்ப்ப செய்தியை அவர்களிடம் கூறினேன். நான் கூறியதை கேட்டு அவர்கள் இருவரும் அப்படியே அமைதியாகிவிட்டனர்.

அம்மா
சிறிது நேரம் அமைதியாக இருந்த நேஹாவின் பெற்றோர் பின்னர் என்னை திட்டத் துவங்கிவிட்டனர். திருமணத்திற்கு முன்பு இப்படியா செய்வது என்று என்னை விளாசினார்கள். நேஹாவின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டார். திடீர் என்று அவர் மூக்கில் இருந்து ரத்தம் வரத் துவங்கிவிட்டது. அதை பார்த்து நான் பயந்துவிட்டேன்.

பயம் 
நேஹாவின் பெற்றோரிடம் உண்மை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் சொன்னேன். திடீர் என்று திருமணம் நடந்ததால் என் நண்பர்கள் பலரால் வர முடியவில்லை. அவர்கள் எல்லாம் என் மீது கோபப்பட்டனர். நான் நேஹாவை காதலித்தேன், அவரை திருமணம் செய்ய விரும்பினேன் என்றார் அங்கத் பேடி.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment