வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பீச் பக்கம் வராதீங்க.. டாஸ்மாக் கடைகளை மூடுங்க.. விடாமல் துரத்தும் கஜா!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 15, 2018

பீச் பக்கம் வராதீங்க.. டாஸ்மாக் கடைகளை மூடுங்க.. விடாமல் துரத்தும் கஜா!



கஜா புயல், கடலூரில் அதிரடி முன்னெச்சரிக்கை

கஜா டாஸ்மாக் வரை புயலை கிளப்பி விட்டான் போலிருக்கிறது!! மிரட்டி கொண்டிருக்கும் கஜா புயல் நாளைக்கு காலை கடலூர் - பாம்பன் இடையே, நாகை அருகே கரையை கடக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் மணிக்கு 90 கி.மீ., முதல் 100 கி.மீ., வேகத்துக்கு காத்து பலமாக வீசும் என்று தெரிவித்து வருகிறார்கள்.


இதன்காரணமாக பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
குறிப்பாக கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய இடங்களில்தான் மழை நிறைய பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் எச்சரிக்கை காரணமாக கடலூரில் பள்ளி, கல்லூரி மூடப்பட்டன. எல்லா கடலோர பகுதிகளிலும் மக்கள் அலார்ட்டாக உள்ளனனர். 
 
மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். பல்கலைக் கழக தேர்வுகள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டன. புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் யாரும் பீச் பக்கம் வரவேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதைபோலவே கஜா புயல் தீவிரமடைந்து வருவதால், காரைக்காலில் சாயங்காலம் 5 மணிக்கு மேல் எல்லா கடைகள் மற்றும் நிறுவனங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதை தவிர, காரைக்காலில் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment