வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கள்ளக்காதலுக்காக மனைவியே கொலை செய்தது அம்பலம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 26, 2018

கள்ளக்காதலுக்காக மனைவியே கொலை செய்தது அம்பலம்

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன், அவரது நண்பர் என மூவரையும் இரண்டே நாளில் கைது செய்து சிறையில் அடைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா திருக்கூர்ணம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் மணிவண்ணன் (26).
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கடந்த 23-ஆம் தேதி இரவு கரூரை அடுத்த மணல்மேடு பகுதியில் மணிவண்ணனை கல்லால் தலையை நசுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மணிவண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து மணிவண்ணனின் மனைவி காயத்ரி தேவி (21), அவரது கள்ளக்காதலன் கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா கிழக்கூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கமலக்கண்ணன் (20), இவரது நண்பர் ரூபன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரண்டே நாட்களில் கண்டுபிடித்த அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.


No comments:

Post a Comment