வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 28, 2018

படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை

படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்ததைத் தட்டிக் கேட்ட தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு  கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் அவ்வப்போது தந்தையிடம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார் . இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை விக்னேஷ் காதலித்து வந்தது தந்தை சுந்தரராமனுக்கு தெரியவந்துள்ளது.
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை சுந்தரராமனின் தலையில் கல்லைப் போட்டு விக்னேஷ் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த தண்டராம்பட்டு காவல்துறையினர் சுந்தரராமன் உடலை மீட்டதுடன் விக்னேஷை கைது செய்தனர்.

சமீபத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கல்லூரி மாணவி ஒருவர் குத்திக்கொன்ற கொடூர சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment