வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கந்து வட்டி.. கடன் தொல்லை.. விவசாயி தற்கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 18, 2018

கந்து வட்டி.. கடன் தொல்லை.. விவசாயி தற்கொலை



போடி அருகே ராசிபுரத்தில் கந்துவட்டி கடன் தொல்லை காரணமாக ஏலக்காய் விவசாயி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த விவசாயி சதிஸ்குமார் (34), கந்து வட்டி பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
தற்கொலை கொண்ட விவசாயி சதிஸ்குமாருக்கு முருகேஸ்வரி (30) என்ற மனைவியும் மிர்சன் (8) யஸ்வந்த் (2) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். சதிஸ்குமார் கேரளாவில் ஏலக்காய் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வந்தார்.
 
இவர் ராசிங்காபுரத்தை சேர்ந்த சிக்கிலியன் மற்றும் மதியழகன் ஆகியோரிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் கடனாக பெற்று இருக்கிறார்.
இந்நிலையில் இருவரும் நேற்று இரவு சதிஸ் குமாரை அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதிஸ்குமார் நள்ளிரவில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைபற்றி வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment