For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், சுசிலீக்ஸில் வெளிவந்த ஒருசில தகவல்கள் குறித்து சின்மயி மீது ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதில் ஒன்று சின்மயிக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்ததாகவும், அது எந்த அளவுக்கு உண்மை என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.
(தொடர்ச்சி கீழே...)
இது குறித்து வீடியோ ஒன்றின் மூலம் பதிலளித்துள்ள சின்மயி, ‘கடந்த ஒன்றரை வருடங்களாக சுசிலீக்ஸில் வந்த ஒரு கருத்து குறித்து தமிழில் உள்ள கொச்சையான அனைத்து வார்த்தைகள் மூலம் ஒரு சில தமிழ் உள்ளங்கள் என்னிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.
குறிப்பாக என் கேரியரை மேம்படுத்த நான் செய்த அட்ஜெஸ்ட்மெண்டுக்கள் என்னென்ன? எனக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்தது உண்மையா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு இப்போது நான் பதில் கூறுகின்றேன். சுசிலீக்ஸில் இந்த விஷயம் வந்தபோது அப்போதே இந்த குற்றச்சாட்டை நான் மறுத்திருந்தேன்.
அதுமட்டுமின்றி சுசித்ரா கூறிய இந்த விஷயத்தில் உண்மையில்லை என்றும் அவர் மனநிலை சரியில்லாத நேரத்தில் கூறிய குற்றச்சாட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
கார்த்திக் தனது டுவிட்டில் ‘சின்மயி மீது சுசித்ரா கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறியுள்ளார். உண்மை ஒருநாள் வெளியே வரும் என்ற எனது நம்பிக்கை வீண்போகவில்லை.
மொத்ததில் கேள்வி கேட்ட தமிழ் உள்ளங்கள் அனைவருக்கும் கார்த்திக்கின் டுவிட்டே பதிலாக உள்ளது’ என்று சின்மயி கூறியுள்ளார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக கூகுள் மேப் துல்லியமாக...
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச.
காலை உணவு என்பது ஒருநாளின் ஆரோக்கியமான தொடக்கத்திற்கு மிகவும்
அவசியமான ஒன்று. ஏனெனில் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட
தேவையான ஆற்றலை வழங்குவது காலை உணவுதான். எனவே எக்காரணத்தை முன்னிட்டும்
காலை உணவை தவிர்ப்பது என்பது கூடாது. காலை உணவு எந்த அளவிற்கு முக்கியமோ
அதே அளவிற்கு என்ன உணவை காலை உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதும்
முக்கியம்.

ஆரோக்கியமற்ற காலை உணவை உண்பதைப்போலவே சரியான காலை உணவை உண்ணாததும்
உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதேசமயம் காலை உணவிற்கு முன்னர் நீங்கள்
என்ன சாப்பிட வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் காளி
உணவிற்கு முன்னர் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் உங்கள்
ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.
(தொடர்ச்சி கீழே...)
சிட்ரஸ் பழங்கள்
காலை உணவிற்கு முன்னர் சிட்ரஸ் பழங்களை ஒருபோதும் சாப்பிடக்கூடாது, ஏனெனில்
இதில் உள்ள அமிலத்தன்மை உங்கள் வயிற்றில் அமிலத்தன்மை மற்றும்
வாயுக்கோளாறை உண்டாக்கும். இவற்றில் உள்ள பைபர் மற்றும் ப்ரெக்டொஸ்
வெறும்வயிற்றில் எடுத்துக்கொள்ளும்போது செரிமானத்தின் வேகத்தை குறைக்கிறது.
ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை காலை உணவிற்கு முன் எடுத்துக்கொள்ள
கூடாது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம், பைபர் மற்றும் மக்னீசியம் உள்ளது,
இதனால்தான் இதனை காலை உணவிற்கு முன் சாப்பிடக்கூடாது. அதிகளவு மக்னீசியம்
இதை கோளாறுகளை உண்டாக்கக்கூடும்.

பேரிக்காய்
காலை உணவிற்கு முன் பேரிக்காய் சாப்பிடுவது உங்கள் வயிற்றின் உட்புற சதைகளை
பாதிக்கக்கூடும், அதற்கு காரணம் அதிலுள்ள அதிகளவு பைபர். வயிற்றின் உட்புற
சவ்வானது மிகவும் மென்மையானது. இதனால் அதிகளவு பைபரை தாங்க இயலாது. காலை
உணவுக்கு முன் பேரிக்காய் சாப்பிடுவது அல்சரை உருவாக்கும்.
கார்பனேற்றப்பட்ட பானங்கள்
பொதுவாக கார்பனேற்றப்பட்ட பானங்களில் அதிகளவு சர்க்கரையும், கார்பன்-டை-
ஆக்சைடும் உள்ளது. இந்த கார்பன்-டை-ஆக்சைடு உங்கள் வயிற்றில் வாயுவை
அதிகரிக்கும் மேலும் வயிற்றுக்குள் வீக்கத்தை உருவாக்கும். இந்த அதிகளவு
சர்க்கரை பசியின்மையை ஏற்படுத்தும், எனவே இதனை காலை உணவிற்கு முன் சாப்பிட
வேண்டும்.
வெள்ளரிக்காய் மற்றும் காய்கறிகள்
எந்த நேரம் வேண்டுமென்றாலும் சாலட் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்ற ஒரு
கருத்து நிலவுகிறது, இது தவறான கருத்தாகும். நார்ச்சத்துக்கள் நிறைந்த
வெள்ளரிக்காய் மற்றும் காய்கறிகளை காலை உணவிற்கு முன் எடுத்துக்கொள்வது
நல்லதல்ல. இது செரிமானத்தை தாமதமாக்குவதுடன் அடிவயிற்றில் வலியையும்
ஏற்படுத்துகிறது.
தக்காளி
தக்காளியில் அதிகளவு டானிக் அமிலம் உள்ளது இது வயிற்றில் உள்ள அமிலத்தின்
அளவை அதிகரிக்கிறது. மேலும் இதில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது இது
நெஞ்செரிச்சல் மற்றும் வாயுக்கோளாறை உண்டாக்கும். எனவே காலை உணவிற்கு முன்
தக்காளி சாப்பிடுவதை தவிருங்கள்.
கேக்
கேக்குகளில் செறிவூட்டப்பட்ட ஈஸ்ட் இருப்பதால் இதனை காலை உணவிற்கு முன்
சாப்பிடுவது நல்லதல்ல. இது வயிற்றின் உட்புற சதைகளில் பாதிப்பை
ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள அதிகளவு சர்க்கரை காலை உணவிற்கு முன்
வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளபடும்போது அது கல்லீரலில் பாதிப்பை
ஏற்படுத்தும்.
தயிர்
தயிரில் உள்ள லெக்டோபேசிலஸ் உறையவைக்கும் பண்பு கொண்டது. இதில் உள்ள
லாக்டிக் அமிலம் வயிற்றுக்கு நன்மைகளை வழங்கக்கூடியது. காலை உணவிற்கு முன்
தயிர் சாப்பிடும்போது இதில் உள்ள பாக்டீரியாக்கள் வயிற்றில் உள்ள
ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அழிக்கக்கூடும். மேலும் இதனால் உடலுக்கு தேவையான
பல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கமால் போகலாம்.
ஜாம்
ஜாமில் உள்ள சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உங்கள் ரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் சமநிலையை பாதிக்கும். எனவே காலை உணவிற்கு முன் ஜாம்
சாப்பிடுவது நல்லதல்ல. காலை உணவாக பிரட் மற்றும் ஜாம் சாப்பிடுவது
பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
அடைக்கப்பட்ட பழச்சாறுகள்
செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட அடைக்கப்பட்ட பழச்சாறுகளை காலை உணவிற்கு
முன் சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதனை காலை
உணவிற்கு முன் குடித்தால் அது உங்களுக்கு பசியின்மையை ஏற்படுத்தும் மேலும்
நாள் முழுவதும் அயர்வாக உணரவைக்கும்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா
வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு
திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த
மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில
என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை
கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி
பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5
மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து
வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகனுக்கு திருமணம் செய்ய ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள
சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை
அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர்
வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல
பெண்களும் வைரமுத்து மீது பா...
-
கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்,
அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக
கூகுள் மேப் துல்லியமாக...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும்
நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை
பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
-
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து
ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச.
தொண்டைக்கட்டு ஏற்படும் போது குரல் உடைந்து சத்தம் குறைகிறது.
கரகரப்பான மற்றும் சோர்வான குரல் சில நேரம் பேச முடியாமல் ஒரு வித வலியைக்
கொடுக்கும். நீண்ட நேரம் பேசுவதால், தொற்று பாதிப்பால், அல்லது வேறு சில நோயால்
இந்த தொண்டைக்கட்டு ஏற்படலாம். குரல்வளை, மூச்சுக்குழல் போன்றவற்றில்
பாதிப்பு ஏற்படும்போது இந்த தொண்டைக்கட்டு ஏற்படலாம்.

தொண்டைக்கட்டு
பொதுவாக அதிக சளி பிடிக்கும் நாட்களிலும் இந்த நிலை உண்டாகலாம். ஆனால்
அடுத்த சில தினங்களில் இந்த தொண்டைக்க்கட்டு தானாக மறைந்து இயல்பான குரல்
வெளிப்படும். ஒருவேளை அடுத்த சில தினங்களில் உங்கள் குரல் இயல்பு நிலைக்கு
திரும்பாமல் இருந்தால் அதனை கவனிக்க வேண்டியது அவசியம். இத்தகைய நிலையை
சரிசெய்து சிகிச்சை அளிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. ஆகவே தொலைந்த குரலை
மீட்டெடுக்க உள்ள வழிமுறைகளை இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்
வாருங்கள்.
(தொடர்ச்சி கீழே...)
காரணங்கள்
இந்த தொண்டைக்கட்டு பல நிலைகளில் உண்டாகலாம். குரலை மோசமாக பயன்படுத்துவது,
வாழ்வியல் மாற்றம், தொற்று பாதிப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தால்
தொண்டைக்கட்டு உண்டாகலாம். கரகரப்பான குரல் மற்றும் தொண்டைகட்டிற்கான சில
காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
குரலில் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் குரல் அழற்சியாக இருக்கலாம். குரல்
வளையில் தொற்று ஏற்படுவதன் காரணமாக வீக்கம் ஏற்படுவதால் இந்த தொண்டைக்கட்டு
உண்டாகலாம்.
குரல்வளை அழற்சி தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கும்போது
அது நாட்பட்ட நிலையை அடைகிறது.
இந்த நிலையில் குரல் இழப்பு என்பது
நாளடைவில் உண்டாகிறது.
மது மற்றும் சிகரெட் புகைப்பதால் குரல் இழப்பு உண்டாகலாம். தொண்டைக்கட்டு
மற்றும் குரல் இழப்பிற்கான முக்கிய காரணிகளாக இவை உள்ளன. தொடர்ந்து மது
அருந்தி, புகை பிடிப்பதால் அவற்றின் நச்சு காரணமாக குரல்வளை அழற்சி
உண்டாகலாம்.
குரலை மோமான முறையில் பயன்படுத்துவதால் கூட குரல் இழப்பு அல்லது
தொண்டைக்கட்டு உண்டாகலாம். தொடர்ந்து கத்துவது அல்லது தொண்டையை கிழித்துக்
கொண்டு பேசுவது போன்ற காரணத்தால் குரல்வளை சேதமடையலாம். குரல்வளையில்
பக்கவாதம் அல்லது புற்றுநோய் போன்றவையும் சில நேரம் தொண்டை கரகரப்பின்
காரணமாக இருக்கலாம்.
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease
(GERD)) என்பது வயிற்றில் உள்ள அமிலம் பின்னோக்கி வழிந்து உணவுக்குழாயை
வந்தடைகிறது. இந்த அமிலம் குரல்வளையை பாதித்து சேதப்படுத்துகிறது.
பாலிப்ஸ் என்பது குரல்வளையின் அசாதாரண வளர்ச்சி என்பதாகும். இதனால்
குரல்வளையின் தசைகள் பலவீனமடைகின்றன, இத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்
தொண்டைக்கட்டிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டுமா? குரல்வளை
அழற்சியிலிருந்து 24 மணிநேரத்தில் உங்களால் நிவாரணம் பெற முடியும். கீழே
குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி உங்கள் தொண்டைக்கட்டை எளிதில்
போக்கலாம்.
இஞ்சி
பாடகர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொண்டைக்கட்டு ஏற்படுவது சாதாரணமான ஒரு
விஷயம். அவர்களுக்கு இஞ்சி சிறந்த தீர்வைத் தருகிறது. குரல் வளையைச்
சுற்றியிருக்கும் சளி மென்படலில் இது ஒரு இனிமையான விளைவைத் தருகிறது..
இஞ்சியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கமாக இருக்கும்
குரல்வளைக்கு நிவாரணம் தருகிறது. மேலும் கூடுதலாக, இஞ்சியை உட்கொள்வதால்,
உங்கள் சுவாசப் பாதையில் உள்ள தொற்றுகள் நீக்கப்படுகிறது.
ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து தோல் சீவி, அதனை அப்படியே சாப்பிடலாம்.
இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடுவதால் அதன் சுவை அதிகரிக்கும்.
அல்லது, கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சியை போட்டு கொதிக்க விடவும்.
பின்பு அந்த நீரை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். ஒரு
நாளில் மூன்று முறை இதனை பருகலாம்.
தேன்
தேனின் மென்மையான தன்மை குரல்வளையை மிருதுவாக்கி உங்கள் குரலை மீட்டுத்
தருகிறது. தொண்டை எரிச்சலைப் போக்கி அழற்சியைக் குறைக்கிறது. குரல்வளை
அழற்சியைப் போக்க ஒரு அற்புதமான தீர்வு உள்ளது. அது, தினமும் ஒரு ஸ்பூன்
ஆர்கானிக் தேன் சாப்பிடுவது. அல்லது ஒரு சிட்டிகை மிளகு தூளுடன், இதனைக்
கலந்து இந்த கலவையை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருகலாம்.
மேலும் தேனுடன் துளசி சாறு சம அளவு சேர்த்து தினமும் மூன்று வேளை
பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆப்பிள் சிடர் வினிகர்
தொண்டைக்கட்டுடன் நீங்கள் அனுபவிக்கும் அசௌகரியங்களை விலக்க ஆப்பிள் சிடர்
வினிகர் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் கிருமி எதிர்ப்பு பண்பு ,
தொண்டையில் உள்ள தொற்றை நீக்கி குணப்படுத்துகிறது.
இனிமையான குரலுக்கு ஆப்பிள் சிடர் வினிகர் சிறந்த தீர்வாகும். ஆகவே தினமும்
ஒரு க்ளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து அந்த
நீரை பருகவும். அல்லது ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தண்ணீர் சம அளவு
எடுத்து, அந்த கலவையைக் கொண்டு வாயைக் கொப்பளிக்கவும். தினமும் இரண்டு முறை
இதனைச் செய்யலாம்.
உப்பு நீரால் கொப்பளித்தல்
தொண்டை தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கு உப்பு நீரால் கொப்பளிப்பது ஒரு
சிறந்த தீர்வாகும். சுவாச பாதையில் உள்ள சளியைப் போக்க உப்பு உதவுகிறது,
மற்றும் வெந்நீர் தொண்டைக்கு இதமான உணர்வைத் தருகிறது.
மேலும் உப்பு கலந்த நீர் ஒரு கிருமி நாசினி பண்பைக் கொண்ட ஒரு நீர். ஆகவே
வேறு எதாவது தொற்று பாதிப்பின் காரணமாக தொண்டைக்கட்டு உண்டாகும்போடும் அதனை
போக்க முடியும். ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து
கொள்ள வேண்டும். இந்த நீரைக் கொண்டு தொண்டையில் ஊற்றி கொப்பளிப்பதால்
தொண்டைக்கு நிவாரணம் கிடைக்கிறது. பாடகர்கள் இதனை அடிக்கடி முயற்சிக்கலாம்.
ஒரு நாளில் மூன்று முறை இதனைச் செய்யலாம்.
நீராவி சிகிச்சை
ஒரே நாள் இரவில் தொண்டைக்கட்டை போக்குவதில் நீராவி சிகிச்சை மிகச் சிறந்த
தீர்வைத் தருகிறது. இது கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால்
முயற்சித்து பாருங்கள். நீராவி பிடிப்பதால் அழற்சி மற்றும் அசௌகரியம்
குறைந்து குரல் இழப்பு கட்டுப்படுகிறது. குரல் வளை அழற்சியைப் போக்க நீராவி
பிடிக்கும்போது அத்தியாவசிய எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில்
தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் சில துளிகள்
லாவேண்டேர் என்னை அல்லது செவ்வந்தி பூ எண்ணெய் சேர்த்து கலந்து அந்த நீரை
ஆவி பிடிக்கவும். ஒரு நாளில் இரண்டு முறை நீராவி பிடிப்பதால் நல்ல தீர்வு
கிடைக்கும்.

மிளகு
தொண்டைக்கட்டு ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மிளகு நல்ல பலனைத் தரும்.
இருமல் மற்றும் தொண்டைக்கட்டு போன்ற பாதிப்புகளுக்கு மிளகு உடனடி
நிவாரணத்தை வழங்குகிறது. தொண்டை எரிச்சலைப் போக்கவும் மிளகு பயன்படுகிறது.
மேலும் குரல்வளையில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் குரல்வளையில்
தொற்று பதிப்பு ஏதேனும் இருந்தால் அதனையும் மிளகு சரி செய்கிறது. அரை
ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் மிளகு தூளுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் மூலம் இந்த கலவையை மெதுவாக உட்கொள்ளவும்.
அல்லது மிளகுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையை ஒரு
கிளாஸ் தண்ணீரில் சேர்க்கவும். இந்த நீரை தினமும் பருகி வரவும்.
எலுமிச்சை
குரல்வளை அழற்சி உண்டாகும்போது நீங்கள் தாராளமாக எலுமிச்சையை
பயன்படுத்தலாம். தொண்டையின் ஈரப்பதத்தை இது அதிகரிக்கும். மேலும் எரிச்சல்
மற்றும் வறட்சியைப் போக்கி குரல் இழப்பை சரி செய்கிறது.
மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால் தொற்று பாதிப்பைக் குறைக்க
உதவுகிறது.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் சிறிதளவு தேன்
சேர்த்து கலந்து பருகவும். தினமும் சில முறை இதனை பருகலாம். அல்லது
எலுமிச்சையை பாதியாக நறுக்கி அதில் சிறிதளவு மிளகு மற்றும் உப்பு தூவி அதனை
உட்கொள்ளலாம்.
எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் சேர்த்து கலந்து அந்த நீரை தொண்டை வரை ஊற்றி
கொப்பளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச்
செய்யலாம்.
பூண்டு
பூண்டில் அழற்சி எதிர்ப்பு தன்மை உண்டு. இதனால் தொண்டை வலி குணமடைகிறது.
மேலும் தொண்டையில் உள்ள அழற்சியைக் குறைத்து எளிதில் உங்களை பேச வைக்கிறது.
ஒரு பூண்டை இரண்டு பாதியாக நறுக்கிக் கொள்ளவும். வாயின் இரண்டு
பக்கத்திலும் இந்த பூண்டு பற்களை வைத்து அதன் சாற்றை உறிஞ்சிக் கொள்ளவும்.
இந்த சாறு உங்கள் தொண்டைக்குள் சென்று அழற்சியைக் குறைக்கும்.
வெதுவெதுப்பான நீரில் இரண்டு துளிகள் பூண்டு எண்ணெய்யை சேர்க்கவும். இந்த
நீரை தினமும் இரண்டு முறை தொண்டையில் ஊற்றி கொப்பளிக்கவும்.
வழுக்கும் எல்ம் மூலிகை
சளி சவ்வுகளை சீராக்கி, தொண்டையின் கரகரப்பை போக்கி குரலை மீட்டுத் தரும்
ஒரு சிறந்த மூலிகை இந்த எல்ம் மூலிகை ஆகும். உங்கள் தொண்டைக்கட்டு உண்டான
அடுத்த சில தினங்களில் இதனை பயன்படுத்தும்போது நிச்சயம் ஒரு மாற்றம்
உண்டாகும். சில நேரங்களில் உங்கள் குரல் இழப்பிற்கான உடனடி நிவாரணத்தையும்
இது வழங்குகிறது.
இரண்டு கப் தண்ணீரில் இந்த மூலிகையை இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து
கொள்ளவும். ஐந்து நிமிடம் இந்த மூலிகை நீரில் ஊறியவுடன் அந்த நீரை ஒரு
நாளில் இரண்டு முறை பருகலாம். மேலும் இந்த எல்ம் மூலிகை தாய்ப்பால்
கொடுக்கும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை நினைவில் கொள்ள
வேண்டும். சர்க்கரை கலந்த மிட்டாய் உட்கொள்வதால் கூட தொண்டைக்கட்டு
குறையலாம்.
ஏலக்காய்
ஆயுர்வேத மருந்தில் ஏலக்காய் ஒரு தனி சிறப்பு பெற்ற ஒரு பொருளாகும். தொண்டை
கரகரப்பைப் போக்கி இழந்த குரலை மீட்டுத் தர இது உதவுகிறது. ஏலக்காயின்
அழற்சி எதிர்ப்பு பண்பு வீக்கமடைந்த குரல்வளையை சீராக்க உதவுகிறது.
தொண்டைக்கட்டிற்கான காரணம் எதுவாக இருந்தாலும் ஏலக்காய் சிறந்த தீர்வைத்
தருகிறது. ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மெல்லவும். இதனால் தொண்டை
ஈரப்பதம் பெறுகிறது. அல்லது ஏலக்காய் தூளுடன் சிறிதளவு தேன் சேர்த்து
தினமும் சாப்பிட்டு வரவும்.
எலுமிச்சை எண்ணெய்
குரல்வளை அழற்சியைப் போக்க எலுமிச்சை எண்ணெய் ஒரு சிறந்த வழியாகும். இதனால்
உங்கள் இழந்த குரல் மீட்கப் படுகிறது. சளி மற்றும் காய்ச்சல் காரணமாக
தொண்டை பாதிப்பு ஏற்பட்டாலும் அதனைப் போக்க எலுமிச்சை எண்ணெய்யை
பயன்படுத்தலாம்.
எலுமிச்சை எண்ணெய் உடலின் நச்சுகளைப் போக்கி, தொண்டையில் உள்ள சளியை
விரட்டுகிறது. அதனால் இருமல் குறைந்து உங்கள் குரல்வளைக்கு ஓய்வு
கிடைக்கிறது. ஒரு கிளாஸ் நீரில் இரண்டு துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து
தினமும் பருகி வரலாம்.
புதினா எசன்ஷியல் ஆயில்
குரல்வளை அழற்சியை உண்டாக்கும் ஒவ்வாமை பாதிப்பிற்கு புதினா எண்ணெய் ஒரு
சிறந்த தீர்வாகும். தொண்டையில் உண்டாகும் எரிச்சல் மற்றும் கரகரப்பை போக்கி
அசௌகரியத்தை விரட்டுகிறது. உங்கள் குரல் இழப்பிற்கு காரணமான எல்லா வித
பிரச்சனைகளையும் போக்க இது உதவுகிறது. தொண்டையில் உள்ள கோழையை அகற்றி
குரல்வளையில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவுகிறது.
ஆகவே தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு துளிகள் புதினா
எண்ணெய்யை சேர்த்து பருகி வரவும்.
மாஷ்மேல்லோ வேர்கள்
பாடகர்கள் தங்கள் குரலை இனிமையாக பராமரிக்க பல காலமாக மஷ்மேல்லோ வேர்களை
பயன்படுத்தி வருகின்றனர். இது தொண்டைக்கு கவசமாக இருந்து தொண்டை எரிச்சல்
ஏற்படாமல் பாதுகாக்கிறது. மாஷ்மேல்லோ , நிணநீர் வீக்கத்தை குறைத்து
குணப்படுத்துதலை விரைவாக்குகிறது. இருமலைக் குறைக்க உதவுகிறது. மாஷ்மேல்லோ
வேர்களை நீரில் கொதிக்க வைக்கவும். சில நிமிடங்கள் அவை நீரில் ஊறியவுடன்
அந்த நீரை தினமும் பருகி வரவும். நல்ல பலன் கிடைக்கும் வரை தொடர்ந்து இதனை
பின்பற்றவும்.
குரல்வளைக்கு ஓய்வு கொடுக்கவும்
ஒரே நாளில் உங்கள் தொண்டைக்கட்டைப் போக்க சிறந்த வழி, உங்கள் குரல்வளைக்கு
ஓய்வு கொடுப்பது. முடிந்த அளவிற்கு பேசுவதைத் தவிர்க்கவும். பேசும் நேரம்
மிகவும் மென்மையாக பேசவும். கிசுகிசுப்பதை தவிர்க்கவும், பேசுவதைக்
காட்டிலும் கிசுகிசுப்பதால் உங்கள் குரல்வளை அதிகம் பாதிக்கப்படலாம்.
தொண்டையை அடிக்கடி கனைத்துக் கொள்ள வேண்டாம். இதனால் உங்கள் குரல்வளை
அதிகம் பாதிக்கபப்டும். முடிந்த அளவிற்கு பேசாமல் இருக்க முயற்சிக்கவும்.
திரவம் அதிகம் பருகவும்
எந்த விதத்தில் நீங்கள் நோய்வாய்ப் பட்டாலும் அதிக அளவு திரவ உணவுகளை
எடுத்துக் கொள்ளவும். உங்கள் குரல்வளை அழற்சிக்கும் இது பொருந்தும். ஜூஸ்,
தண்ணீர், தேநீர், சூப் என்று எந்த வடிவத்திலும் நீங்கள் திரவ உணவுகளை
எடுத்துக் கொள்ளலாம். இதனால் நீங்கள் நீர்ச்சத்தோடு இருக்கலாம். மேலும்
சளியை துப்ப முடியும். வெதுவெதுப்பான திரவம் பருகுவதால் அடைப்பு நீங்கும்
என்பதால் சூப் பருகலாம். காபின் சேர்க்கப்பட்ட பானங்களைப் பருகுவதால்
நீர்ச்சத்து குறைவதால் அவற்றை மட்டும் தவிர்ப்பது நல்லது.

செய்ய வேண்டியவை
உறைய வைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் தொண்டைக்கு இதமளிக்கும்.
உங்கள் வீட்டில் ஒரு ஈரப்பதமூட்டி வைக்கவும்
நீங்கள் அறிந்த ஒவ்வொரு ஆழ்ந்த மூச்சு பயிற்சியை முயற்சிக்கவும்
செய்யக் கூடாதவை
உங்கள் தொண்டையில் தானாக சளி வெளிவராத பட்சத்தில் அதனை வெளியேற்ற முயற்சிக்க வேண்டாம்.
கத்துவது அல்லது சத்தமிடுவதை தவிர்க்கவும்.
மூக்கடைப்பு நீக்கி போன்றவற்றை உபயோகிப்பதால் மேலும் தீங்கு உண்டாகும் என்பதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா
வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு
திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த
மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில
என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை
கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி
பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5
மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து
வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகனுக்கு திருமணம் செய்ய ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள
சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை
அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர்
வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல
பெண்களும் வைரமுத்து மீது பா...
-
கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்,
அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக
கூகுள் மேப் துல்லியமாக...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும்
நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை
பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
-
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து
ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச.
உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. மக்கள் மத்தியல்
இது ஒருவரின் பாத்திரத்தின் தன்மை, அவர் மீதான சமூக பார்வையை அளவிடும்
ஒன்றாக இருக்கிறது. துணையை இழந்த பிறகு ஆண்கள் உடலுறவில் ஈடுபட
முயல்வதற்கும், பெண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும் நிறையவே வேற்றுமை
காணும் நமது சமூகம்.
அவ்வகையில் ஒரு இளம் ஆண் பிள்ளை கொண்டுள்ள ஒரு விதவை தாயின் வாழ்வில்
தாம்பத்தியம் எவ்வாறு தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு
உண்மை பதிவு. அப்பெண் கூறியவாறே...

அஸாம்!
"நான் 40 வயது மிக்க ஒரு விதவை பெண். எனக்கு 20 வயதில் ஒரு ஆண் மகன்
இருக்கிறான். நாங்கள் அஸாமில் ஒரு சிறிய டவுன் பகுதியில் வாழ்ந்து
வருகிறோம். எனக்கும் தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்கிறது. இதை பலரால்
ஜீரணிக்க முடியாது."
(தொடர்ச்சி கீழே...)
கொடுமையான குழந்தை பருவம்!
"தாயற்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் தந்தையின் வளர்ப்பில் வளர்ந்த
நான்காவது பெண் நான். இது ஒரு சாதாரண வாழ்க்கை அல்ல. குழந்தை பருவத்தில்
நிறைய கொடுமைகளை அனுபவித்துள்ளேன். என் இளைய சகோதரனுக்கு மட்டுமே அனைத்து
அக்கறையும், காதலும் கிடைத்தது. பெண்கள் நாங்கள் எப்போதும்
தவிர்க்கப்பட்டோம். தந்தையால் மட்டுமல்ல, உறவினர்களாலும் கூட."
பருவ வயது!
"கொடுமைகள் மட்டுமே கண்ட, கடந்துவந்த நான், ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும்
என பத்து வயதில் எனக்கு நானே சத்தியம் செய்துக் கொண்டேன். அப்போது ஒரு
நல்ல தாய் என்றால் என்ன, எது என எனக்கு தெரியாது."
"என் தோழிகள், நண்பர்களை போல நான் எனது பருவ வயதை பெரிதாக அனுபவிக்கவில்லை.
ஓவியம் வரைவதிலேயே என் காதல் நிறைந்திருந்தது. எனது எதிர்காலம் ஓவியம்
சார்ந்தே இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால், என் தந்தையை எதிர்த்து
என்னால் எனது கனவை தொடர முடியவில்லை. என் அவர் எனது சகோதரனின் எதிர்காலத்தை
பிரகாசமாக்க மட்டுமே எண்ணியிருந்தார். பெரும்பாலான சேமிப்பை அவனது
எதிர்காலத்திற்கு ஒதுக்கினார். இதனாலே எனது ஓவிய கனவுகளுக்கான விஷயங்களை
நான் அவரிடம் கேட்க முடியவில்லை."
மனதளவில் உடைந்து போனேன்!
"மிக விரைவாக திருமணம், போதைக்கு அடிமையான கணவன், உடனே குழந்தை,
முடிக்கப்படாத படிப்பு என பல விஷயங்கள் என்னை மனதளவில் உடைந்து போக
செய்தது. இதற்கு இடையிலும் நான் எனக்கு நானே செய்துக் கொண்ட சத்தியத்தை
மறக்கவில்லை. என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் விவாகரத்தும் செய்ய
முடியாமல் போனது. இங்கு தான் நான் உண்மையான போராட்டத்தை உணர்ந்தேன்.
விதவை கோலம்!
"விவாகரத்து செய்ய முடியாது என்ற போதிலும். ஒரே வீட்டில் தனியாக
வாழ்ந்தேன். எனக்கான உணவை நானே உழைத்து வாங்கினேன். லீகல் திருமண உறவில்
இருப்பதால், மீண்டும் ஒரு திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்ற நிலை.
கடைசியில் ஒரு நாள் எனது பொறுப்பற்ற கணவர் உயிரிழந்து என்னை விதவை
ஆக்கினார்."
சமூகத்தின் பார்வை!
"இந்த சமூகம் எனக்கு அளிக்கும் முகவரி சீட்டை என்னால் மறுக்க முடியாது என்ற
போதிலும். நான் எனது வாழ்வை இலகுவாக வாழ ஆரம்பித்தேன். இனிமேல், 18 வயது
பெண்ணாக உரிமைகள் பறிக்கப்பட்டு சுதந்திரமாக இல்லாமல் இருந்த பெண்ணாக
இன்றி, நான் என் உரிமைகளை சுதந்திரமான சிந்தனையோடு வாழலாம் என்ற தைரியம்
பிறந்தது."
இந்த சமூகம் என்னை எப்படி வாழ சொல்கிறது?
"ஒரு விதவையாக இந்த சமூகம் என்னை எப்படி வாழ சொல்கிறது? உடலுறவு இன்றி! 18
வயதாக இருந்தாலும், 50 வயதாக இருந்தாலும் ஒரு பெண் விதவை என்றால் உடலுறவு
இல்லாமல் தான் வாழ வேண்டும் என்பது தான் நமது சமூகத்தின் சட்டம். பல
காரணங்களால் நாம் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதில்
பெரிய காரணம் எனது மகனுக்காக. இந்திய சமூகம் ஒரு விதவை பெண் உடலுறவில்
ஈடுபட கூடாது என்று தான் கூறுகிறது. ஆனால், எனக்கு புரியவில்லை, ஏன் நான்
ஒரு ஆரோக்கியமான தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது?"
"ஒரு ஆணுக்கு செக்ஸ் தேவை என்பது பொதுவாக இருக்கும் போது. பெண்ணுக்கு ஏன்
அது வேறு மாதிரியான பார்வையில் பார்க்கப்படுகிறது. இதை பற்றி பல விவாதங்கள்
சமூகத்தில் வெளிப்படையாக வர வேண்டும். ஒரு நல்ல தாயாக என் மகனை நான்
வளர்க்காவிட்டால் இச்சமூகம் என்னை கேள்விக் கேட்கலாம். என் படுக்கையறையை
எட்டிப்பார்த்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை."
இது இந்த ஒரு பெண்ணுக்கு மட்டும் நேர்ந்த நிலை அல்ல. நமது சமூகத்தில்
ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒரு பெண் மனதுக்குள் அடக்கி
வைத்துக் கண்டிருக்கும் ஒரு விஷயம் தான் இது.
அன்று முதல் இன்று வரை!
பண்டைய காலத்தில் இருந்தே நமது சமூகத்தில் இயற்றப்பட்ட வாழ்வியல் விதிகள்
ஆண்களை சார்ந்தும், ஆண்களின் ஆதிக்கம் நிறைந்துமே காணப்படுகிறது.
பழக்கவழக்கத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்கள் எத்தனை திருமணம்
வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம், பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும்
என்பதில் துவங்கி.
இன்றளவும் துணை இழந்த பிறகு, விவாகரத்து செய்த பிறகு ஒரு ஆண் மறுமணம்
செய்வதில், ஒரு பெண் மறுமணம் செய்வதில் ஏகப்பட்ட மாற்று பார்வைகள், வேற்று
சிந்தனைகள், சமநிலையற்ற விவாதங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா
வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு
திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த
மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில
என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை
கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி
பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5
மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து
வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகனுக்கு திருமணம் செய்ய ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள
சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை
அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர்
வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல
பெண்களும் வைரமுத்து மீது பா...
-
கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்,
அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக
கூகுள் மேப் துல்லியமாக...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும்
நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை
பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
-
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து
ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச.
Featured Post
பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...