வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தாய் வீட்டிலிருந்து 10 நிமிடம் லேட்டாக வந்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 30, 2019

தாய் வீட்டிலிருந்து 10 நிமிடம் லேட்டாக வந்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 நிமிடங்கள் தாமதமாக வந்த மனைவியை கணவர் விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




முத்தலாகிற்கு எதிராக லோக்சபையில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அவ்வாறு கூறும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் எட்டாவில் பெண் ஒருவர் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்ட பாட்டியை நலம் விசாரிக்க சென்றிருந்த அவரை காணாமல் கணவர் போன் செய்துள்ளார்.



உத்தரவு  

அப்போது தாய் வீட்டில் இருப்பதாக கூறிய மனைவியை இன்னும் அரை மணி நேரத்தில் இங்கு வர வேண்டும் என கணவர் உத்தரவிட்டதற்கு அவரும் சரி என அடித்து பிடித்து கிளம்பினார்.


பெண் அதிர்ச்சி 

அப்படியும் 10 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் சகோதரருக்கு போன் செய்து முத்தலாக் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.


சிசு கலைந்தது 

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் திருமணத்தின் போது எனது பெற்றோர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் என் கணவர் வீட்டார் என்னை பலமுறை தாக்கியுள்ளனர். இது போல் என்னை அடித்ததால் எனது வயிற்றில் வளர்ந்த சிசு கலைந்து விட்டது.


அரசுக்கு கோரிக்கை 

எனது குடும்பம் வறுமையில் வாடுவதால் கணவர் வீட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது. இந்த ஆத்திரத்தில் வெறும் 10 நிமிடம் தாமதமாக வந்த என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார். இந்த விவகாரத்தில் அரசு எனக்கு உதவ வேண்டும்.


கண்ணீர் விட்ட பெண் 

எனக்கு நீதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இல்லாவிட்டால் எனக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அந்த பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

No comments:

Post a Comment