வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அதிக நேரம் விளையாடிய கணவன், ஆண்குறியை அறுத்து டாய்லெட்டில் ஃப்ளஷ் செய்த மனைவி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 24, 2019

அதிக நேரம் விளையாடிய கணவன், ஆண்குறியை அறுத்து டாய்லெட்டில் ஃப்ளஷ் செய்த மனைவி!

மனைவி மீது அன்பு செலுத்தாமல் இருந்தால், அவர் மீது அக்கறை காட்டாமல் இருந்தால், கணவன் பின்னாளில் அதிக வேதனை பட வேண்டிய சூழல் உருவாகும் என்பார்கள். 


ஆனால், ஆண்குறி இழக்கும் வகையிலான வேதனை உண்டாகும் என அந்த தென்கொரிய கணவனுக்கு தெரியாது போலும். தன்னைவிட அதிகம் கோல்ப் விளையாட்டில் கவனம் செலுத்தி வந்த கணவனின் ஆண்குறியை அறுத்து உலக கணவன்மார்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளார் ஒரு தென்கொரிய பெண்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


கோல்ப்!  

யோசு என்ற பகுதியை சேர்ந்தவர்கள் அந்த நடுவயது தம்பதிகள். தென்கொரிய கணவர் கோல்ப் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். நேரம், காலம் கடப்பது தெரியாமல் அதிக நேரம் தினமும் கோல்ப் மைதானத்தில் விளையாடி கழித்துள்ளார். இதனால், தனது 50 வயது கணவன் மீது மனைவிக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.


சமையல் அறையில் இருந்து...  

ஒரு நாள் தனது கணவன் உறங்கி கொண்டிருக்கும் போது சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து, கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம் பார்த்து ஆண்குறியை அறுத்து விட்டார். அறுத்தது மட்டும் இல்லாமல், மீண்டும் அது கிடைத்து விட கூடாது என கருதி, கழிவறையில் போட்டு ஃப்ளஷ் செய்துள்ளார். கோல்ப் விளையாடியதால் இப்படி கூட ஒரு மனைவிக்கு கோபம் வருமா என்ன?


அக்கம், பக்கத்தினர்!

அந்த ஐம்பது வயதுமிக்க கணவன், வலி தாங்கமால் தரையில் உருண்டு அலறும் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அவர் இரத்தம் ஒழுக துடித்து அழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கோல்ப் மட்டும் காரணம் அல்ல...  

மிரர் யூ.கே என்ற ஊடகத்தில் வெளிவந்த செய்தியில், கணவர் கோல்ப் விளையாடியது மட்டும் காரணமல்ல, மனைவிக்கு பணம் தாராததும், அளவுக்கு அதிகமாக நேரத்தை கோல்ப் மைதானத்தில் செலவழித்ததும், கணவன், மனைவிக்கு இடையே பெரும் சண்டையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே இந்த விபரீத நிகழ்வு நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மிஸ்.கிம்!

54 வயதுமிக்க மிஸ். கிம் தான் இந்த விபரீத நிகழ்விற்கு காரணமான மனைவி. நீதிமன்றத்தில் தான் செய்த குற்றத்தை மிஸ். கிம் ஒப்புக்கொண்டார். மேலும், நீதிமன்றத்தில் தன்னை கணவர் ஒதுக்கியதன் காரணத்தால் இப்படி செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இப்போது அந்த ஆண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது...


வேலூர்!  

வேலூரில், கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த மனைவி அவரது ஆணுறுப்பை அறுத்து சம்பவம் சமீபத்தில் ஜூலை மாதத்தில் நடந்துள்ளது. அறுத்த கணவனின் ஆணுறுப்பை பர்சில் எடுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார் அந்த கோபக்கார மனைவி.
கைது!  

பின்னர் சரசு என்னும் அந்த பெண்ணை வேலூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்த போது அறுத்த கணவனின் ஆண்குறியை பர்ஸில் வைத்திருந்தார்.


பிரிந்து வாழ்கிறார்கள்!  

இவர்களுக்கு திருமணாகி 14 வருடங்கள் ஆகிறது. விசாரணையில் இந்த ஜோடி கடந்த ஒரு வருடமாக பிரிந்து தான் வாழ்ந்து வருவதாகவும். சரசுவின் கணவர் வேறு நபருடன் கள்ள உறவில் இருந்துள்ளார்.


குடி போதையில் கணவன்! 

சரசுவின் கணவர் ஒரு நாள் குடி போதையில் இருந்த போது சரசுவிற்கும் ஜெகதீசன் (கணவர்) சண்டை ஏற்பட்டுள்ளது. சரசுவிற்கு வயதாகிவிட்டதால் வேறு பெண்ணை திருமணம் செய்யும் திட்டத்திலும் இருந்துள்ளார் ஜெகதீசன். சண்டை ஓய்ந்த பிறகு நள்ளிரவு 2 மணி அளவில் கூர்மையான கத்தியை எடுத்து ஜெகதீசனின் ஆணுறுப்பை அறுத்துள்ளார் சரசு.


மருத்துவமனை!  

ஜெகதீசன் கதறுவதை கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் அவரை வேலூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, இப்போது அவர் அபாயக்கட்டதை தாண்டியுள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment