வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இறந்த பிச்சைக்காரரின் செயற்கைக் காலில் விதவிதமாய் ரூபாய் நோட்டுகள்.. ஷாக் ஆன போலீசார்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 03, 2019

இறந்த பிச்சைக்காரரின் செயற்கைக் காலில் விதவிதமாய் ரூபாய் நோட்டுகள்.. ஷாக் ஆன போலீசார்!

ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த பிச்சைக்காரரின் செயற்கைக் காலில் இருந்து ஏராளமான பணம் மீட்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடக்க இயலாத மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். 
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் காலை திடீரென உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்நபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவரின் உடல் கனமாக இருந்ததால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரது செயற்கைக் காலை அகற்றினர். அதில் ஏராளமான ரூபாய் மற்றும் சில்லரைக் காசுகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். 

அதாவது, 42 நோட்டுகள் ரூ.500, 470 நோட்டுகள் ரூ.100, 20 நோட்டுகள் ரூ.200, 215 நோட்டுகள் ரூ.50, 430 நோட்டுகள் ரூ.20, 528 நோட்டுகள் ரூ.10 என மொத்தம் ரூ. 96 ஆயிரம் இருந்துள்ளது. கிட்டத்தட்ட லட்சாதிபதியாக இருந்த அந்த பிச்சைக்காரர் யார் என போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஷரீப் என்றும் தெரிய வந்துள்ளது. திருட்டு பயத்தில் அவர் தான் சேமித்த பணத்தை தனது செயற்கைக் காலில் மறைத்து வைத்திருந்துள்ளார்.

No comments:

Post a Comment