வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கூட்டிபெருக்கி சுத்தம் செய்யும் ஸ்வீப்பர் வேலைக்கு விண்ணப்பித்த BE, MBA, MCom, MTech பட்டதாரிகள்..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, February 06, 2019

கூட்டிபெருக்கி சுத்தம் செய்யும் ஸ்வீப்பர் வேலைக்கு விண்ணப்பித்த BE, MBA, MCom, MTech பட்டதாரிகள்..?

தலைப்பைப் படித்த உடனேயே இது அரசு வேலை என புரிந்து கொண்டீர்களா..! சபாஷ் சரி தான். 


 தமிழக அரசு 10 ஸ்வீப்பர்கள் மற்றும் 04 சுத்தம் செய்யும் பணியாட்கள் வேலைக்கு கல்வித் தகுதி தேவை இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

வழக்கம் போல அடித்து நொறுக்கிவிட்டார்கள் நம் தமிழக இளைஞர்கள். 14 பணி இடங்களுக்கு 4,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்திருக்கின்றன. இந்த தேர்வுக்கே சராசரியாக பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் விண்ணப்பித்து இருக்கிறார்களாம். 70 பேரின் விண்ணப்பங்கள் ரத்து செய்யபப்ட்டு 3,930 பேருக்கு தேர்வு அனுமதிக் கடிதத்தை டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்களாம்.


அரசாங்க காசு  

இந்த 10 ஸ்வீப்பர்கள் மற்றும் 04 சுத்தம் செய்யும் பணியாட்கள் வேலைக்கு 15,700 முதல் 50,000 ரூபாய் வரை சம்பளம் நிர்ணயித்திருக்கிறார்களாம். இதில் இட ஒதுக்கீடும் செய்திருக்கிறார்களாம். மொத்த 14 பணி இடங்களில் 4 General Category, 4 OBC, 3 MBC, 2 SC, 1 STs.


யோகி ஆதியநாத் மாநிலத்தில் 

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் உத்திரப் ப்ரிஅதேசத்தின் 62 பியூன் வேலைக்கு 93,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இந்த 93,000 பேரில் தங்கள் துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முனைவர் பட்டங்கள் (டாக்டர் பட்டம்) பெற்றவர்களும் உண்டு.


மும்பையில்  

மகாராஷ்டிரத்தில் மந்திரலயாவில் 13 உணவு பரிமாறுபவர் பணிக்கு 7,000 பேர் விண்ணப்பிட்த்திருந்தனர். இதிலும் கணிசமாக பட்டப் படிப்பு படித்தவர்கள் எல்லாம் சரமாறியாக விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் கேட்கப்பட்டிருந்த கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி தான்.


NSSO  

சமீபத்தில் மோடி அரசின் அராஜக நடவடிக்கைகளில் ஒன்றாக தேர்சிய மாதிரி சர்வே அமைப்பின் தரவுகள் மத்திய அரசால் வெளியிடப் படாமல் இருக்கிறது. கடந்த டிசம்பர் 2018லேயே வெளியாகி இருக்க வேண்டிய வேலைவாய்ப்பு விவரங்கள் வரும் மார்ச் 2019-ல் தான் வெளியிட இருக்கிறார்களாம். அதில் சொல்லப்பட்டது போலவே இந்தியவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்புகள் சரிந்து வருவதையே இது காட்டுகிறது.

No comments:

Post a Comment