வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 22, 2019

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்

தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர். 



தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை மற்றும் பல மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது. 

 இதையடுத்து, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபேர்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.

 கடந்த மூன்று நாட்களாக வைகாசி மாத திருவிழா நடைபெற்று வரும் நிலையில்,மழை வேண்டி கோயில் வளாகத்தில் இன்று அங்கப்பிரதட்சணம் நடத்தப்பட்டது. சில பக்தர்கள் அலகு குத்தியும், சாடல் குத்திக்கொண்டு ராட்டினத்தில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவினை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


No comments:

Post a Comment