வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நீட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 30, 2019

நீட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) எழுதியவர்கள், தங்களது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தவறான சுயவிவரங்களைக் குறிப்பிட்டிருந்தால் அவற்றை மே 31-ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு உள்ளிட்டவற்றில் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.


 வேறு தகவல்களை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது.


 நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதியன்று வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக சுயவிவரங்களைச் சரிபார்த்து திருத்திக் கொள்வதற்காக இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக என்டிஏ விளக்கமளித்துள்ளது.


No comments:

Post a Comment