வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞர்.. பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்.. வெளுத்த கிராம மக்கள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 08, 2019

பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞர்.. பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்.. வெளுத்த கிராம மக்கள்!

பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞர்.. பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்.. வெளுத்த கிராம மக்கள்! கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞரை பெண் குரலிலேயே பேசி வரவழைத்த அவரது கணவர் கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசியும் ஆபாச என.எம்.எஸ் அனுப்பியும் வந்துள்ளார்.



அந்த பெண் பலமுறை எச்சரித்தும் மர்ம நபர் கண்டுகொள்ளாததால் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே தனது மனைவியின் செல்போனுக்கு வந்த எண்ணில் தொடர்பு கொண்ட சுப்ரமணியம் பெண் குரலில் பேசி தனது வீட்டிற்கு வருமாறு அந்த நபருக்கு அழைப்பு விடுத்தார்.


இதனை உண்மை என நம்பிய அந்த நபரும் பெண்ணின் வீட்டிற்கு வந்தார். வீட்டில் சுப்ரமணியம் மற்றும் சிலர் இருப்பதை கண்டதும் ஓட்டம் பிடித்த மர்ம நபரை விரட்டி பிடித்த சுப்ரமணியம் மற்றும் பொதுமக்கள் அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபரின் பெயர் ராம் பிரபு (35 ) என்பதும், இவர் மீது ஏற்கனவே காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராம் பிரபுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment