வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, August 20, 2019

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..!

மத்திய அமைச்சகம் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1,351 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இது குறித்து சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-


 மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெற உள்ளது. இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்தது. இந்தப் பணியிடங்கள் குறித்த விரிவான விளம்பரம், தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள் போன்ற தகவல்களை ssc.nic.in அல்லது sscsr.gov.in என்னும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம். 


 இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment