குடிகாரன் சொன்ன பேச்சு விடிஞ்சா போச்சு என்பார்கள். அவர்கள் சொல்ற
விஷயம் மட்டுமல்ல செய்கின்ற செயலும் அப்படித்தான். ஆல்கஹால் உள்ளே போனால்
ஆப்போஷிட்ல யார் வர்றாங்கன்னு கூட தெரியாத அளவுக்கு குடிக்கிறது தான் நிறைய
பேரோட பழக்கமாக உள்ளது.
அளவுக்கு அதிகமாக குடிப்பது தன்நிலை மறந்து
உயிருக்கே சில நேரங்களில் ஆபத்தாகக் கூட முடிந்து விடுகிறது.
அப்படித்தான் ஒருவர் எக்குத் தப்பா குடிச்சு பேதையில என்ன செய்ஞ்சு
இருக்காருன்னு பாருங்க. குடிச்சாலே போதும் சிலர் முரட்டுத்தனமாக கூட
நடந்துப்பாங்க.
நினைவே இல்லாமல் இருந்தால் இந்த பையன் நிலைமை தான்
உங்களுக்கும்.
தன்னுடைய குடிபோதையில் சைடிஸ்னு நினைச்சு சாவிய விழுங்கின கொடுமைய பாருங்க.
நடந்த விபரீதம்
ஷாங் என்ற சீன நாட்டைச் சார்ந்த 26 வயது இளைஞன் தன்னுடைய வார விடுமுறையை
கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
பார்ட்டியில்
நல்லா தண்ணிய போட்டு ஆடி கூத்தடிச்சுட்டு வீட்டுக்கு வரும் போது தான்
வீட்டுச் சாவி காணோம்ங்றது தெரிய வந்துள்ளது. வீட்டிற்கு உள்ளே தூங்கிக்
கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி தன்னுடைய சாவி தொலைந்ததை
தெரிவித்துள்ளார்.
மார்பகத்தில் வலி
அடுத்த நாள் காலையில் எழும் போது அவனுக்கு நெஞ்சு முழுவதும் எரிச்சல்
ஏற்பட்டுள்ளது. உடனே அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையை நாடி
உள்ளார்.
அப்பொழுது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது தான்
அவனது மூச்சுக் குழாயில் சாவி சிக்கியது தெரிய வந்திருந்தது. அந்த
பையனுக்கே தெரியவில்லை கீ எப்படி தன் வாய்க்குள் போனது என்று. அந்தளவுக்கு
இரவில் பேதை தலைக்கேறி இருந்துள்ளான்.
அறுவை சிகிச்சை செய்யும் நிலை
மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்து சாவியின் நிலையை கண்டறிந்து அறுவை
சிகிச்சை செய்து அதை நீக்கி உள்ளனர். மேலும் இந்த சாவி அந்த பையனின் குடலை
கிழித்து உள்ளதாகவும் உணஙுக்குழாயையும் கிழித்து உள்ளதாகவும் மருத்துவர்கள்
கூறுகின்றனர். எப்படியோ மருத்துவர்கள் சாவியை எடுத்துவிட்டனர்.
என்ன ஆகும்?
காயங்கள் ஆற மாதங்கள் ஆகும் என்றும் அதுவரை இவர் குடிக்காமல் இருந்தால்
நல்லது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத பத்தி நீங்க
என்ன நினைக்கீங்க. தன்நிலை மறக்கும் குடி அவசியம் தான, யோசிங்க மக்களே!
அவ்வப்போது நமது வாழ்வில் சில அதிசயங்களை சந்தித்து பிரமித்துப்
போவோம். குறிப்பாக மருத்துவ உலகில் சில விஷயங்கள் விநோதமாக நடைபெறும். இதனை
ஆங்கிலத்தில் "மெடிகல் மிராக்கில்" என்று கூறுவா். அது போல் ஒரு வினோத
சம்பவத்தைத் தான் நாம் கானவிருக்கிறோம்.
பொதுவாக நாம் நமது பிள்ளைகளைத் திட்டும்போது," நான் என் இரத்தத்தை
வியர்வையாக்கி உன்னை படிக்க வைக்கிறேன்.. " என்று கூறுவோம். நாம் அவ்வளவு
கடினமாக உழைக்கிறோம் என்ற பொருளில் இப்படி நாம் கூறுகிறோம். ஆனால்
உண்மையில் ஒரு பெண்ணுக்கு வியர்வையாக இரத்தமே வெளியாகிறது என்று கேட்டால்
உங்களுக்கு எப்படி இருக்கும். தலை சுற்றுகிறதா? வாருங்கள் தொடர்ந்து இதனைப்
பற்றி அறிந்துக் கொள்வோம்.
மருத்துவ உலகில் சில வழக்குகள்
எப்படி இது சாத்தியம்?" என்ற கேள்வி எழ வைக்கும். இதுவும் அப்படி ஒரு அரிய
செயல் தான். 10 மில்லியன் பேர்களில் ஒருவருக்கு மட்டுமே இத்தகைய சம்பவம்
நடைபெறும் சாத்தியம் உண்டு.
ஒரு 21 வயது பெண். அவரைப் பற்றிய மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த
பெண்ணை ஒரு முற்றிலும் விச்சிதிரமான நிலைக்காக மருத்துவமனையில்
அனுமதித்திருந்தார்கள். அதாவது அவருக்கு வியர்க்கும்போது அவருடைய முகம்,
உள்ளங்கை போன்ற இடங்களில் வியர்வையாக இரத்தம் வெளியேறுகிறது. குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா?
நம்ப முடிகிறதா?
இதனை கேட்பதற்கு நம்பமுடியாமல் இருந்தாலும், இது ஒரு உண்மையான நிலை ஆகும்.
இப்படி சில வழக்குகள் மிகவும் அரிதாக மருத்துவ வரலாற்றில் காணப்படுகிறது.
இத்தாலிய மருத்துவர்கள் இந்த பெண்ணை பரிசோதித்து அவருடைய திகிலூட்டும்
அறிகுறியை எண்ணி இந்த நிலை பற்றிய குழப்பத்தில் இருந்தனர்.
மேலும் அந்தப்
பெண்ணின் சருமத்தில் இரத்தம் வெளியேறுவதற்கான எந்த ஒப்ரு புண்ணும் அல்லது
சிராய்ப்பும் இல்லை என்பது மேலும் அதிர்ச்சியை உண்டாக்கும் செய்தியாக
இருந்தது.
ரத்தப்போக்கு
திடீரென்று இப்படி இரத்தப்போக்கு ஏற்படும் நிலை உருவாகக்கூடிய எந்த ஒரு
குறிப்பிட்ட காரணமும் அந்தப் பெண்ணின் உடல் நிலையில் இல்லை என்பது மருத்துவ
பரிசோதனையில் தெரிய வந்தது.
மேலும் அந்தப் பெண் உறங்கும்போதும் உடல்
செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்போதும் இரத்தம் வெளியேறுவது
அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
வியர்வை
இப்படி வியர்வையாக இரத்தம் கடுமையாக வெளியேறுவதைக் கண்ட அந்தப் பெண்
மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்டார். அவருடைய வழக்கு பற்றி கனடா மருத்துவ
நிறுவன பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன.
இந்தப் பெண்ணின் நிலை பற்றி மருத்துவர்கள் இன்னும் விரிவாக விளக்கும்போது,
இந்த வித அசாதாரண அறிகுறியைக் கொண்டு இந்த பெண் கடந்த மூன்று ஆடுகளாக
அவதிப்படுவதாகவும், ஒவ்வொரு முறை இப்படி ஏற்படும்போது இந்த நிலை தொடர்ந்து
ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள் நீடிப்பதாகவும் கூறினர்.
இந்த வகை அரிய
பாதிப்பு காரணமாக, உணர்வு ரீதியாக அந்தப் பெண் பெருமளவில்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எப்போதும் தனித்து இருப்பதாகவும் கூறினர்.
ரத்த அணுக்கள்
எண்ணிக்கை
அந்தப் பெண்ணின் இரத்த அணுக்கள் எண்னிக்கை மற்றும் இரத்த உறைவு செயல்பாடு
போன்றவை வழக்கமான நிலையில் இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறுதியாக இந்தப் பெண்ணுக்கு ஹெமடோஹிட்ரோசிஸ் (hematohidrosis) என்ற
பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வகை பாதிப்பு 10 மில்லியன்
மக்களில் ஒருவரை மட்டுமே பாதிக்கும் என்பதும் அறியப்படுகிறது.&bsp;
அவரது
மருத்துவ சிகிச்சை பற்றி மருத்துவர்கள் விளக்கினர்.
அந்தப் பெண்ணிற்கு ப்ரோப்ரன்னோலோல்(propranolol) என்னும் பீட்டா ப்ளாக்கர்
மருந்து கொடுக்கப்படுவதாக கூறினர்.
இந்த மருந்து அவருடைய அறிகுறிகளைக்
கணிசமாகக் குறைக்கும் என்றும் துரதிர்ஷ்டவசமாக இந்த பாதிப்பில் இருந்து
அவர் முற்றிலும் வெளிவர முடியாது என்றும் தெரிவித்தனர்.
இந்த நோய் பாதிப்பிற்கான காரணம் பற்றி முற்றிலும் தெரியவில்லை என்றாலும்,
மிக அதிக அழுத்தம் மற்றும் பயம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று
கூறப்படுகிறது.