வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: புதுபட்டினம் ஊராட்சியில் தி.மு.க. சார்பாக கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய காஞ்சிபுரம்.எம்.பி | Corona Relief Given at Pudupattinam by DMK MP
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, May 16, 2020

புதுபட்டினம் ஊராட்சியில் தி.மு.க. சார்பாக கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய காஞ்சிபுரம்.எம்.பி | Corona Relief Given at Pudupattinam by DMK MP


செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம்,  புதுபட்டினம் ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி தவிக்கும் ஏழை, எளிய, தினக்கூலி தொழிலாளர்களுக்கு, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் கொரோனா நிவாரண உதவிகளை 15.05.2020 அன்று வழங்கினார்.
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன் முன்னிலையில் புதுபட்டினம் ஊராட்சியில் உள்ள 4000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் புதுபட்டினம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான ஏ.தாமோதரன் மற்றும் எம்.ஏ.ஏஜென்சி உரிமையாளருமான அம்சா தாமோதரன் ஆகியோர் உதவிப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் தமின், கயல், மாரிமுத்து உட்பட தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள், தோழமை கட்சியின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment