வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலாமூரில் தொண்டு நிறுவனம் வழங்கிய கொரோனா நிவாரணம் மற்றும் மரக்கன்றுகள் | Velamur Corona Relief | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, July 07, 2020

வேலாமூரில் தொண்டு நிறுவனம் வழங்கிய கொரோனா நிவாரணம் மற்றும் மரக்கன்றுகள் | Velamur Corona Relief | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வேலாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு சென்னை மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனமானது வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை கொரோனா நிவாரண உதவியாக வழங்கியது.
சென்னை மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.எஸ்.கோமதி தலைமையில் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அ.டோமினிக் முன்னிலையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் வேலாமூர், இராமாபுரம், காட்டுக்கரணை, செண்டிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த ஏழை எளிய பெண்கள் பயனடைந்தனர். 
இந்த நிகழ்வில் யு.எஸ்.எப் தொண்டு நிறுனத்தின் நிறுவனர் அன்பழகன், தன்னார்வலர் தணிகைக்குமார் மற்றும் மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 



மேலும், பின்வரும் காலங்களில் மகளிர்களுக்கு தேவையான கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி, தையற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும் என மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.எஸ்.கோமதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment