செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்,
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வேலாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்
வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு சென்னை மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட்
தொண்டு நிறுவனமானது வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மளிகைப்
பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை கொரோனா நிவாரண உதவியாக வழங்கியது.
சென்னை மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு
நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.எஸ்.கோமதி தலைமையில் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின்
நிறுவனர் அ.டோமினிக் முன்னிலையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் வேலாமூர்,
இராமாபுரம், காட்டுக்கரணை, செண்டிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த ஏழை எளிய பெண்கள்
பயனடைந்தனர்.
இந்த நிகழ்வில் யு.எஸ்.எப் தொண்டு நிறுனத்தின்
நிறுவனர் அன்பழகன், தன்னார்வலர் தணிகைக்குமார் மற்றும் மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட்டின்
உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள்
வழங்கப்பட்டது.
மேலும், பின்வரும் காலங்களில் மகளிர்களுக்கு தேவையான கைவினைப் பொருட்கள்
உற்பத்தி செய்யும் பயிற்சி, தையற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்
என மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.எஸ்.கோமதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment