வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: September 2021
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, September 13, 2021

இனி அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்திற்கு பணியிட மாறுதல் கோர முடியாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு | Here after No Transfer as Request by Government Employee | Vil Ambu News

 'எந்தவொரு அரசு ஊழியரும் குறிப்பிட்ட இடத்துக்கு தன்னை பணியிட மாற்றம் செய்யும்படி கேட்க முடியாது,' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியை, அம்ரோகா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கடந்த 2013 முதல் 2017 வரையில் பணியாற்றி வந்தார்.

இந்த இடத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி முடித்ததை தொடர்ந்து, தன்னை கவுதம் புத்தாநகர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யும்படி அதிகாரிகளிடம் விண்ணப்பம் அளித்தார். அதை அதிகாரிகள் நிராகரித்தனர். இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், 'மனுதாரர் முதன் முதலில் பணி நியமனம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டில் இருந்து 2013ம் ஆண்டு வரையில் கவுதம் புத்தாநகர் கல்லூரியில் தான் தொடர்ந்து 13 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். ஏற்கனவே, பணியாற்றிய இடத்துக்கு தன்னை இடமாற்றம் செய்யும்படி அவர் கோர முடியாது.

வேண்டுமானால், அவர் விரும்பும் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்ய கோரலாம்,' என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பேராசிரியை மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் கடந்த 6ம் தேதி இந்த அமர்வு அளித்த தீர்ப்பில், 'எந்தவொரு அரசு ஊழியரும் குறிப்பிட்ட இடத்துக்கு தன்னை இடமாற்றம் செய்யும்படி நிர்பந்தம் செய்ய முடியாது. தேவைக்கு ஏற்றப்படி பணியிட மாற்றம் செய்வது, அதிகாரிகளின் முடிவை பொருத்தது,' என கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

Saturday, September 04, 2021

பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து - மு.க.ஸ்டாலின் | MK Stalin Announcement Today | Vil Ambu News

வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நுழைவு வரி ரத்துக்கான மசோதா இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று , நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.