வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-08-08
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, August 08, 2021

நகைக் கடன் தள்ளுபடிக்கு பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் - தமிழக அரசு | Gold Loan Cancellation in Tamilnadu | Vil Ambu News

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக கூட்டுறவுத்துறை மூலம் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

2021 தமிழக சட்டப் பேரவை தேர்தலின்போது, திமுக ஆட்சி அமைந்தால் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த நிலையில் கரோனா 2-ம் அலை தீவிரமடைந்ததால் அதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய பொறுப்பு அரசின் முன் நின்றது. அரசு செயல்பாடுகளால் தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பட்டபோது, தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் கட்சிகளிடம் மட்டுமன்றி வாக்காளர்களிடம் இருந்தும் கிளம்பத் தொடங்கின.

அவற்றில் ஒன்று கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி தொடர்பானது.

இதற்கிடையில் அரசின் நிதிநிலைமை மிக நெருக்கடியான சூழலில் இருந்ததால் நகைக் கடன் தள்ளுபடியை செயல்படுத்த முடியுமா என்ற குழப்பம் அரசு தரப்பில் காணப்பட்டது. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் நெருக்கடி, வாக்காளர்கள் சமூக ஊடகங்களில் இடும் பதிவுகள் ஆகியவை ஆளும் அரசு மீது எதிர்மறை எண்ணம் உருவாகும் சூழலை ஏற்படுத்தியது. 

எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி நகைக்கடனை தள்ளுபடி செய்வது என்ற உறுதியான முடிவை தற்போது தமிழக அரசு எடுத்துள்ளது. அதேநேரம், நகைக் கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சில விதிகளின் அடிப்படையில் கணிசமாக குறைப்பது எனவும் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியது:

பல்வேறு சூழல்களுக்கு இடையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகம் முழுக்க கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் நகைக் கடன் பெற்றவர்களின் பட்டியலை விரைந்து சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இப்பணிகள் கடந்த 4-ம் தேதி முதல் தமிழகம் முழுக்க தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 பவுன் வரை நகைக் கடன் பெற்றவர்கள் தள்ளுபடி பெறுவர். கடன் அடமானமாக வைக்கப்பட்ட நகை 5 பவுனுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருந்தாலும், 5 பவுன் எடைக்கான கடன் தொகை மட்டுமே பெற்றிருந்தால் அவர்களும் தள்ளுபடி பெறுவர். 5 பவுனுக்கும் அதிகமான நகையின் பேரில் பெற்ற கடன் தள்ளுபடி தொடர்பாக அரசே இறுதி முடிவெடுக்கும்.

மேலும், நகைக் கடன் பெற்றவரோ, அவரது வாழ்க்கைத் துணையோ அல்லது தாய், தந்தையோ அல்லது மகன், மருமகளோ அரசுப் பணிகளில் இருந்தால் அவர்கள் பெற்ற நகைக் கடனை தள்ளுபடி பட்டியலுக்குள் கொண்டு வரும் திட்டம் அரசுக்கு இல்லை. மேலும், தள்ளுபடி என்பதை இலக்காக வைத்து முறைகேடாக யாரேனும் நகைக் கடன் பெற்றிருந்தாலும் அவர்களும் தள்ளுபடி பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறான இனங்களின் கீழ் நகைக் கடன் பெற்றவர்களின் பட்டியல்களை விரைந்து தயார் செய்து அரசுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இப்பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ அரசு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.

இவ்வாறு கூறினர்.

புளூடூத் இயர்போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு | Young men died due to Bluetooth headset | Vil Ambu News

ராஜஸ்தான் மாநிலத்தில் புளூடூத் இயர்போனை சார்ஜிங் செய்து கொண்டே பேசிய நபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


28 வயதான ராகேஷ் நகர், இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் உதய்புரியா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ப்ளூடூத் இயர்போன் சாதனத்தைப் பயன்படுத்தி உள்ளார். 

இந்த புளூடூத் இயர்போனை அவர் சார்ஜிங் செய்து கொண்டே தன்னுடைய நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென அந்த புளூடூத் சாதனம் வெடித்து சிதறி இருக்கிறது.

இந்நிலையில் அந்த புளூடூத் இயர் போன் வெடித்துச் சிதறியதில் அவர், எந்த ஒரு சுய நினைவுமின்றி உடனடியாக மயங்கி கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தால் அவருக்கு இரண்டு காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமு நகரின் உதய்புரியா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராகேஷ் குமார் நகர் அவரது இல்லத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாரானபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து சித்திநாயக் மருத்துவமனையின் மருத்துவர் எல்.எம்.சுந்த்லா கூறுகையில் "புளூடூத் இயர் போன் சாதனம் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து இருக்கிறார்.. கீழே விழுந்த அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம்.. 

பிறகு அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்னுடைய பணி அனுபவத்தில் இது, போன்ற சம்பவம் இதுவே முதல் முறையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். காவல்துறையினரின் கூற்றுப்படி, ராகேஷ் இந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டார் மற்றும் உடன்பிறந்தவர்களில் இவர் தான் மூத்தவர் என்று கூறினர்.

வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப காலத்தில் அனைவருக்கும் அனைத்தும் எளிதாக மாறிவிடுகிறது.. அந்த வகையில் தற்பொழுது வாகனம் ஓட்டுபவர்கள் முதல் வீட்டில் அமர்ந்து கொண்டு செல்போன் மூலம் பாடல்கள் கேட்கும் நபர்கள் வரை, அனைவரும் இந்த புளூடூத் இயர்போன் சாதனத்தை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த புளூடூத் இயர் போன் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.