வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-10-31
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 03, 2021

மரம் முறிந்து விழுந்ததில் இறந்த பெண் காவலருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின் | Lady Police died due to Tree breaking in Chennai | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே மரம் சரிந்து விழுந்ததில், முத்தியால்பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெண் போலீஸ் கவிதா குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகேயுள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் போலீஸ் கவிதா உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரர் முருகன் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரக்கோணத்தை சேர்ந்த கவிதா 2005-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மரம் விழுந்ததில் பலியான கவிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.

23 வயதான அருண்குமார் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார். 18 வயதான அவரது மகள் சினேகா பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். மேலும் இளைய மகன் விஷால் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பெண் போலீஸ் கவிதாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Sunday, October 31, 2021

சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம் | இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு | England Scientist innovative Cellphone charging by urine | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

இங்கிலாந்து விஞ்ஞானிகள் சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.


இங்கிலாந்தின்,பிரிஸ்டலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மனித கழிவுகளை(யூரினை) மின்சாரமாக மாற்றும் புதிய சுத்தமான ஆற்றல் எரிபொருள் கலத்தை (battery) உருவாக்கியுள்ளது.இதன்மூலம்,செல்போன் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம்.மேலும் அதை ஒருநாள் முழு வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு பயன்படுத்த விரும்புகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளாஸ்டன்பரி திருவிழாவில் 'பீ பவர்' திட்டம் முதன்முதலில் பகிரங்கமாக சோதனை செய்யப்பட்டது, அங்கு விஞ்ஞானிகள் கழிப்பறைகள் நிலையான மின்சாரத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். இதுவரை, இது மொபைல் போன்கள், லைட் பல்ப்கள் மற்றும் ரோபோக்களை சார்ஜ் செய்ய பயன்படுத்தப் படுகிறது.இந்த நிலையில், தற்போது வீடுகளுக்கும் அந்த மின்சாரத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக பிரிஸ்டல் பயோஎனர்ஜி சென்டரின் இயக்குனர் டாக்டர் ஐயோனிஸ் ஐரோபௌலோஸ் கூறுகையில்:"திருவிழாவில் ஐந்து நாட்களில் சிறுநீர் கழிக்கும் நபர்களிடமிருந்து சிறுநீர் ஓட்டம் 300 வாட்-மணிநேர மின்சாரத்தை உருவாக்க எங்களுக்கு உதவியது.இதன்மூலம்,ஒரு வாட் லைட்பல்பை 300 மணிநேரம் அல்லது 10 லைட் பல்ப்களை 30 மணிநேரத்திற்கு இயக்க முடியும்" என்று விளக்குகிறார்.

இத்தகைய கண்டுபிடிப்பு நுண்ணுயிர் எரிபொருள் செல்கள் என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. நுண்ணுயிரிகள் பொருளை அதன் வேதியியல் பாகங்களாக உடைத்து, அவை பெருகும்போது, ​​சிறிய அளவிலான மின்சாரத்தை உருவாக்குகின்றன.அயோனிஸ் மற்றும் அவரது குழுவினர் அழுகிய பிளம்ஸ் மற்றும் இறந்த ஈக்களை சாப்பிடக்கூடிய ஒரு ரோபோவை உருவாக்கியபோது இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

ஆர்கானிக் கழிவுகள் ரோபோவின் பேட்டரியை இயக்கும் என்பதை நிரூபித்த பிறகு,குழு மனித கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்கியது. 

மேலும்,அவர்களின் பணி தொடரும் போது, ​​குழு எரிபொருள் செல்களை சுருக்கி, வீடுகளின் சுவர்களில் பொருத்தும் அளவுக்கு சிறிய செங்கற்களில் வைக்க விரும்புகிறது. இந்த செங்கற்களால் எதிர்கால வீடுகள் கட்டப்பட்டு, உங்கள் வீட்டிற்கு தேவையான மின்சார ஆற்றல் சிறுநீர் கழிப்பதிலிருந்து சக்தியாக பெறமுடியும் என்பது இதன் கருத்து.

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர் வரை 'திரவ கழிவுகளை' உற்பத்தி செய்கிறான்.உதாரணமாக, "ஐந்து பேர் கொண்ட குடும்பமாக இருந்தால், அது 10 முதல் 12 லிட்டர் சிறுநீர் வரை இருக்கும்.ஒரு அளவிடப்பட்ட நுண்ணுயிர் எரிபொருள் செல் அமைப்புக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க இது போதுமானது" என்று ஐரோபௌலோஸ் கூறுகிறார்.

இத்தகைய புதிய கண்டுபிடிப்பு ஏழை நாடுகளில் சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க பயன்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

"பாம்பின் வாயில் சிக்கிய தவளையை போல் பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளது" - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் | Thol Thirumavalavan about BJP ADMK relationship | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

பாம்பின் வாயில் சிக்கிய தவளையை போல் பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ஆணவ படுகொலை

ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசும் சரி, இப்போது உள்ள பாஜக அரசும் சரி எந்த முனைப்பையும் காட்டவில்லை என திருமாவளவன் வேதனை தெரிவித்தார். நாடு முழுவதும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் காட்டுமிராண்டிதனமாக நடத்தப்படுகிற ஆணவ படுகொலைகளை தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார். ஆணவ படுகொலைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வராதது தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சாதி மறுப்புத் திருமணம்

இவர்கள் விரும்பினால் ஒரு சட்டம் கொண்டுவருவார்கள் விரும்பாவிட்டால் ஒரு சட்டத்தை நீக்குவார்கள் என மத்திய பாஜக அரசை விமர்சித்த அவர், தமிழகத்தில் நாடக அரசியல் செய்யும் கும்பல் என பாமகவை சூசகமாக சாடினார். ஜாதிமறுப்புத் திருமணங்கள் இன்று உருவானது அல்ல என்றும் திருமாவளவன் வந்த பிறகு தான் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக நாடக அரசியல் செய்யும் கும்பல் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.

உதவி செய்வது போல்

திருவிழாக்களுக்கு உதவி செய்வது போலவும், சாமி சிலைகளை வாங்கிக் கொடுப்பது போலவும் உதவி செய்து தமிழகத்தில் இன்று கிராமங்கள் தோறும் சங்பரிவார்கள் ஊடுருவி வருவதாக திருமாவளவன் தெரிவித்தார். கிராமம் கிராமமாக சென்று தன்னார்வலர்கள் என்ற பெயரில் சங் பரிவார்கள் நச்சு அரசியலை விதைப்பதாகவும் தமிழகத்தை அவர்கள் குறிவைத்துவிட்டார்கள் எனவும் கூறினார். இதனால் பாதிக்கப்படப் போவது நம் வீட்டு பிள்ளைகள் தானே என்ற புரிதல் கூட இல்லாமல் சிலர் செயல்படுவதாக வேதனை தெரிவித்தார்.

பாஜக தந்திரம்

தமிழக கிராமங்களில் சாதி வெறியர்களின் படம் போட்ட பனியன்களை கொடுத்து பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைத்து வருவதாகவும் இதனை பார்க்கும் போது தனக்கு மிகுந்த வேதனையாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், கூட்டணிக் கட்சிகளை பலமிழக்கச் செய்வது தான் பாஜகவின் தந்திரம் என்றும் அப்படித்தான் இன்று அதிமுக விவகாரத்தில் நடந்துகொண்டிருப்பதாகவும் திருமாவளவன் சாடினார்.