வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-10-31
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 09, 2021

ஏரியாவில் காணமல் போன ஏரி | வெளியான சேட்டிலைட் மேப்பால் அதிர்ச்சி | Velachery Lake Missing in Sattlite Map | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

சென்னையின் புறநகர் பகுதியான வேளச்சேரி ஒரு காலத்தில் முழுக்க, ஏரியாக இருந்த பகுதி , என்பதற்கான வரைபட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது.

ஒரு காலத்தில் கிராமமாக இருந்த பகுதிதான் சென்னை. அப்போது இங்கு நிறைய ஏரிகளும், குளங்களும் இருந்தன. ஆனால், சென்னை ஒரு பெரிய நகரமாக மாறிய பிறகு அந்த ஏரிகள் வேகமாக பட்டா போடப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டன.

தற்போது சென்னை அதன் முழு கொள்ளளவை தாண்டி இரண்டு மடங்கு மக்கள் தொகையுடன் விழிபிதுங்கி நிற்கிறது.

வீடுகளுக்குள் தண்ணீர்

இப்போது மழை வரும்போது ஏரிகள் இருந்த பகுதிகளில் வெள்ளநீர் செல்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் சொல்கிறார்கள் . இதுதான் தொடர்கதையாக நடந்து வருகிறது. சென்னை நகரப் பகுதிக்குள் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் லேக் வியூ சாலை இன்னமும் கூட இருக்கிறது. ஆனால் ஏறி எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.


கொளத்தூர் ஏரி குட்டையானது

இப்படித்தான் கொளத்தூர் பகுதியில் இருந்த ஏரி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குட்டை போல தற்போது, மாறிவிட்டது. இது ஒரு பக்கம் என்றால் வேளச்சேரி ஏரி என்று 1980ஆம் ஆண்டு சென்னை வரைபடத்தில் இருந்த பகுதியில் தற்போது முழுக்க முழுக்க கட்டிடங்களாக காணப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வேளச்சேரி ஏரி முக்கால்வாசிக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஏரியின் ஒரு சில பகுதிகள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. வேளச்சேரி இப்போது வெள்ளத்தில் மிதக்கும் சந்தர்ப்பத்தில் இந்த புகைப்படம் வைரலாக சுற்றி வருகிறது.

பள்ளிக்கரணை செல்ல வேண்டும்

அந்த காலத்தில், வேளச்சேரி ஏரியில் உள்ள தண்ணீரானது இந்த விளைநிலங்கள் வழியாக பாய்ந்து சென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு சென்று அங்கிருந்து ஒத்தியம்பேட்டை வழியாக கடலில் கலக்கும். இது தான் இயல்பாக இருந்துள்ளது. ஆனால் தற்போதைய காலத்தில் விளை நிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டதால், மழைகாலத்தில் அங்கு மழைநீர் தேங்கி வெள்ளக் காடாக மாறுகிறது.

வேளச்சேரி மக்கள்

2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது வேளச்சேரி பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் சென்ற மழைநீரால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் அனைத்தும் மூழ்கின. எனவே, அதன்பிறகு, சென்னையில் எப்போது கன மழை பெய்தாலும், வேளச்சேரி பகுதி மக்கள், வேளச்சேரி பாலத்தின் ஓரத்தில் வரிசையாக தங்களுடைய நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இப்போதும் அதைத்தான் செய்துள்ளனர்.

Monday, November 08, 2021

கே.கே.புதூர், இருசமாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நீர்நிலைகளை பார்வையிட்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் | DMK Durgesh Visiting at K K Pudhur, Irusamanallur at Madurantakam Taluk | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட கே.கே.புதூர், இருசமாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை மற்றும் நீர்நிலைகளின் நிலவரம் குறித்து தி.மு.க-வின் மதுராந்தகம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் நேரில் பார்வையிட்டார்.


பின்னர் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர் தங்களது தேவைகளை அதிகாரிகளிடம் ஆலோசித்து விரைந்து நிறைவேற்றுவதாகவும், கனமழை காலத்தில் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில் கினார் ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

















சினிமாவில் எடுக்கப்படும் விபத்து காட்சி போல் திண்டுக்கல் அருகே நிஜ விபத்து | Dindigul Nilakkottai Car Bike Accident | Electric Poll Dead | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதய விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 பேர் பலி.

மதுரை மாவட்டம், மதுரை ஏர்போர்ட், பெருங்குடி பகுதியைச் சேர்ந்த காமு என்ற காமராஜ் வயது 21. அஜித் கண்ணன் வயது 21. மற்றும் இவரது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 5ஆம் தேதி சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் இரண்டு தினங்கள் சுற்றிவிட்டு மீண்டும் கொடைக்கானலில் இருந்து மதுரை நோக்கி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டி சிவன்கோயில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பண்ணைக்காடு நோக்கி சென்ற ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது படுவேகமாக மோதியது.

இதில் அஜித் கண்ணன் சினிமா பட சம்பவம் போல் மோட்டார் சைக்கிளிலிருந்து சுமார் 10 அடி உயரம் பறந்து சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பியில் தொங்கினார். அதேபோன்று காமு என்ற காமராஜ் அப்பகுதியில் காட்டுப் பகுதியில் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பரிதாபமாக இறந்து போனார். 

மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த வரை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார்கள் விரைந்து சென்று இரண்டுபேர் உடல்களையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, November 07, 2021

எலப்பாக்கம் ஸ்ரீசின்மய விநாயகர், ஸ்ரீபாலமுருகன் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நான்காம் நாள் | Elapakkam Balamurugan Temple Kandhasahti Festival | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் ஸ்ரீசின்மய விநாயகர் மற்றும்  ஸ்ரீபாலமுருகன் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நான்காம் நாளான இன்று சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. 



99% நிரம்பிய மதுராந்தகம் ஏரி | Madurantakam Eri Nearby Full | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்புகிறது. அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் இதுவரை 22.9 எட்டியது.

தற்போது கிளியாறு மற்றும் சுற்றுவட்டார ஏரிகளிலிருந்து வரும் உபரி நீரால் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் மதுராந்தகம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, November 03, 2021

மரம் முறிந்து விழுந்ததில் இறந்த பெண் காவலருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின் | Lady Police died due to Tree breaking in Chennai | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே மரம் சரிந்து விழுந்ததில், முத்தியால்பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெண் போலீஸ் கவிதா குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகேயுள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் போலீஸ் கவிதா உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரர் முருகன் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரக்கோணத்தை சேர்ந்த கவிதா 2005-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மரம் விழுந்ததில் பலியான கவிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.

23 வயதான அருண்குமார் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார். 18 வயதான அவரது மகள் சினேகா பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். மேலும் இளைய மகன் விஷால் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பெண் போலீஸ் கவிதாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.