வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-11-07
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 15, 2021

பொம்பல போலீசா இல்ல லம்பாடி பொம்பலயா இவ..? | ஒரு பெண்ணை காவல் நிலையத்திலேயே துயிலுரித்து அட்டூழியம் | Islamabad Police Station Lady Issue | வில் அம்பு

போலீஸ் ஸ்டேஷனுக்கு, விசாரணைக்காக அழைத்து வந்த பெண் ஒருவரை, மிரட்டி அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக டான்ஸ் ஆட வைத்துள்ளனர்.. இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.. இந்த கொடுமையை செய்ய வைத்ததே, ஒரு பெண் போலீஸ் என்பது மற்றொரு அதிர்ச்சி தகவலாகும்.

பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன.. இந்த அட்டூழியங்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்தும், கண்டித்தும் எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது இன்னொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.. பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் குவெட்டா நகரில், ஒரு குழந்தையை கொன்றுவிட்டார்கள்..

கொலை

அங்கிருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில் புகுந்து, மர்மநபர்கள் குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளனர். இந்த கொலை குறித்த விசாரணையை ஜின்னா டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. இது தொடர்பாக பெண் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் தலைமையிலான பெண் போலீசார் அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்... அவரிடம் விசாரணையும் ஆரம்பமானது.

நடனம்

அப்போதுதான் திடீரென அந்த பெண்ணின் ஆடையை களைய சொன்னார் பெண் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத்.. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவும், மிரட்டியே ஆடைகளை களைய வைத்து நிர்வாணமாக்கினர்.. ஒரு பாட்டை ஒலிக்க செய்து, அங்கிருந்தவர்கள் முன்னிலையில் அவரை டான்ஸ் ஆட சொல்லி உள்ளனர்.. நிர்வாணமாக டான்ஸ் ஆடிய நிலையில், அதையும் வீடியோவாக பெண் போலீசார் எடுத்துள்ளனர்.

 

விசாரணை

இந்த சம்பவம்தான் அங்கு வெடித்து கிளம்பி உள்ளது.. போலீஸ் துணை ஐஜி முகமது அசாருக்கு இது தொடர்பான புகாரும் பறந்தது.. அதிர்ச்சி அடைந்த அவர், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தார்.. அதன்படியே, விசாரணையில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத், பெண்ணை நிர்வாணமாக்கி டான்ஸ் ஆட வைத்தது உறுதி செய்யப்பட்டது... இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத்தை உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வைத்ததுடன், அவரை பணியில் இருந்தும் நிரந்தரமாக கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டுள்ளது.

 

அதிர்ச்சி

ஷபானா இர்ஷத்துக்கு உடந்தையாக இருந்த புஷ்ரா அப்சல், ஹூமா பைசல், உஸ்மா நஸ்ரின், பாரா கலீல், சமீனா மன்சூர் ஆகிய 5 பெண் போலீசார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போது, பாதிக்கப்பட்ட பெண் விசாரணை கைதி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்... பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய பெண் போலீசாரே, இப்படி ஒரு அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டது காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 


Sunday, November 14, 2021

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கரூர் மருத்துவர் | Karur Doctor Child Abuse sexually | 17 Age Girl Abused in Karur by Doctor | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

கரூரில் தனது மகளை பிரபல மருந்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை காசாளர் புகார் செய்துள்ளார். இதையடுத்து மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனை மேலாளர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர், கரூரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அப்புகாரில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் மருத்துவர் ரஜினிகாந்த் நேற்று மாலை தனது மகளை தனது அறைக்கு வரச்சொல்லி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தூர்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பொன்னரசியின் மகளை மருத்துவமனை மேலாளர் மூலம் அழைத்துச் சென்று மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்த், மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலாளரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.



அச்சிறுபாக்கம் - எலப்பாக்கம் - இராமாபுரம் சாலைகளில் காவு வாங்கும் பெரும் பள்ளங்கள் | Acharapakkam - Elapakkam - Ramapuram Road Issue | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்,  அச்சிறுப்பாக்கம் - எலப்பாக்கம் மாநில நெடுஞ்சாலை மற்றும் எலப்பாக்கம் - இராமாபுரம் மாநில நெடுஞ்சசாலைகளில் சுமார் அரை அடி ஆழத்திற்கு ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலிய நிறுவனத்திரால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் - மதூர்

எலப்பாக்கம் - சென்னை, எலப்பாக்கம் - வந்தவாசி, எலப்பாக்கம் - காஞ்சிபுரம் - திண்டிவனம் - காஞ்சிபுரம் என பல பகுதிகளுக்கு வாகனங்கள் செல்வதற்காக பிரதானமாக பயன்படுத்தப்படும் இந்த நெடுங்சாலையானது இத்தகைய அவல நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது. 

 

மோகல்வாடி குளக்கரை அருகே உள்ள பள்ளம்

இத்தகைய பள்ளங்களில் மழைகாலங்களில் வாகனங்கள் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து பெரும் விபத்துகளில் வாகன ஓட்டிகள் சிக்குகின்றனர். 


இந்த வழியாக செல்லும் அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு வாகனங்கள் விரைந்து செல்ல இயலாத அவலநிலை ஏற்படுகிறது.

மேலும், பின்னப்பூண்டி மற்றும் அச்சிறுபாக்கம் டாஸ்மாக் கடைக்கு சென்றுவரும் மதுப்பிரியர்கள் வாகனங்களை இந்த சாலைகளில் இயக்கும்போது இதுபோன்ற பள்ளங்களில் முற்றிலும் நிலைதடுமாறி அப்பாவி மக்களின்மீது மோதி அவர்களின் உயிர்களுக்கும் சோகம் விளைவிக்கும் சூழல் அதிகமாக உள்ளது.

பின்னப்பூண்டி டாஸ்மாக் அருகே வெள்ளைகுளம் பகுயில் உள்ள பள்ளம்

இராமாபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே ஏற்பட்டுள்ள பெரும் பள்ளத்தில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 20-க்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இராமாபுரம் மற்றும் கோட்டகயப்பாக்கம் அருகே பெட்ரோலிய நிறுவனத்தினரால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிசெய்யாததால் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு தற்போது வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.

பின்னப்பூண்டி பேருந்து நிலையம் அருகே வளைவு பகுதியில் காணப்படும் சாலை பள்ளங்கள்

அந்த விபத்தின் புகைப்படங்கள் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் அவர்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு சாலையில் உள்ள பள்ளங்கள் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. இருந்தபோதிலும் கனரக வாகன போக்குவரத்தால் மீண்டும் பழைய நிலைக்கு அந்த பள்ளங்கள் மாறிவிட்டன.

பின்னப்பூண்டி டாஸ்மாக் அருகே வெள்ளைகுளம் பகுயில் உள்ள பள்ளம்

எனவே, இதுபோன்ற மனித உயிரை குறிவைக்கும் பள்ளங்களை உடனடியாக நிரந்தரமாக சரிசெய்யவேண்டுமென வாகன ஓட்டிகளும், கிராம பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசு அதிகாரிகளிடம் கோருகின்றனர்.

எலப்பாக்கம் - ஆனைக்குன்னம் செல்லும் சாலை - பரபரப்பான பஜார் பகுதிக்கு நடுவில் உள்ள சகதியான சாலை


மதூர் - கோட்டகயப்பாக்கம் கூட்ரோடு இடையே உள்ள பள்ளம்

மதூர் - கோட்டகயப்பாக்கம் கூட்ரோடு இடையே உள்ள பள்ளத்தில் வாகன டயர்கள் சிக்கும் காட்சி

Saturday, November 13, 2021

எலப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்ற குருபெயர்ச்சி விழா | Elapakkam Balamurugan Temple Gurupeyarchi 2021 | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த எலப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசின்மயவிநாயகர் ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் குருபெயர்ச்சிவிழா சிறப்பாக நடைபெற்றது.

இத்திருத்தலத்தில் தெற்கு திசைநோக்கி அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீகுருபகவான் சன்னதிக்கும், நவகிரகங்களில் உள்ள குருபகவானுக்கும் மாலை 05.30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், குருபெயர்ச்சி விழாவையொட்டி 06.00 மணியளவில் பரிகார ஹோமம் செய்யப்பட்டது.


அதன்பின் 06.21 மணியளவில் குருபகவான் மகர ராசியில்இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து குருபகவானுக்கு மஹா தீப ஆராதனைகளும் பரிகார அர்ச்சனைகளும். பரிகாரபூஜைகளும் 07.00 மணிவரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குருவருள் பெற்றனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வீடியோ













எல்.எண்டத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களுக்கு தன்னார்வலர் வழங்கிய இரவு உணவு | Night Food Provided to L. Endathur Flood Affected Trible People | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எல்.எண்டத்தூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் அரசு கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ்கொடுங்காலூர் ஶ்ரீசாய் ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்கு உரிமையாளர் டாக்டர்.எல். இராசேந்திரன் இரவு உணவு வழங்கினார்.


மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள இருளர் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகளையும் விரைவில் பூர்த்தி செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  





Tuesday, November 09, 2021

ஏரியாவில் காணமல் போன ஏரி | வெளியான சேட்டிலைட் மேப்பால் அதிர்ச்சி | Velachery Lake Missing in Sattlite Map | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

சென்னையின் புறநகர் பகுதியான வேளச்சேரி ஒரு காலத்தில் முழுக்க, ஏரியாக இருந்த பகுதி , என்பதற்கான வரைபட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது.

ஒரு காலத்தில் கிராமமாக இருந்த பகுதிதான் சென்னை. அப்போது இங்கு நிறைய ஏரிகளும், குளங்களும் இருந்தன. ஆனால், சென்னை ஒரு பெரிய நகரமாக மாறிய பிறகு அந்த ஏரிகள் வேகமாக பட்டா போடப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டன.

தற்போது சென்னை அதன் முழு கொள்ளளவை தாண்டி இரண்டு மடங்கு மக்கள் தொகையுடன் விழிபிதுங்கி நிற்கிறது.

வீடுகளுக்குள் தண்ணீர்

இப்போது மழை வரும்போது ஏரிகள் இருந்த பகுதிகளில் வெள்ளநீர் செல்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் சொல்கிறார்கள் . இதுதான் தொடர்கதையாக நடந்து வருகிறது. சென்னை நகரப் பகுதிக்குள் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் லேக் வியூ சாலை இன்னமும் கூட இருக்கிறது. ஆனால் ஏறி எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.


கொளத்தூர் ஏரி குட்டையானது

இப்படித்தான் கொளத்தூர் பகுதியில் இருந்த ஏரி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குட்டை போல தற்போது, மாறிவிட்டது. இது ஒரு பக்கம் என்றால் வேளச்சேரி ஏரி என்று 1980ஆம் ஆண்டு சென்னை வரைபடத்தில் இருந்த பகுதியில் தற்போது முழுக்க முழுக்க கட்டிடங்களாக காணப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வேளச்சேரி ஏரி முக்கால்வாசிக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஏரியின் ஒரு சில பகுதிகள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. வேளச்சேரி இப்போது வெள்ளத்தில் மிதக்கும் சந்தர்ப்பத்தில் இந்த புகைப்படம் வைரலாக சுற்றி வருகிறது.

பள்ளிக்கரணை செல்ல வேண்டும்

அந்த காலத்தில், வேளச்சேரி ஏரியில் உள்ள தண்ணீரானது இந்த விளைநிலங்கள் வழியாக பாய்ந்து சென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு சென்று அங்கிருந்து ஒத்தியம்பேட்டை வழியாக கடலில் கலக்கும். இது தான் இயல்பாக இருந்துள்ளது. ஆனால் தற்போதைய காலத்தில் விளை நிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டதால், மழைகாலத்தில் அங்கு மழைநீர் தேங்கி வெள்ளக் காடாக மாறுகிறது.

வேளச்சேரி மக்கள்

2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது வேளச்சேரி பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் சென்ற மழைநீரால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் அனைத்தும் மூழ்கின. எனவே, அதன்பிறகு, சென்னையில் எப்போது கன மழை பெய்தாலும், வேளச்சேரி பகுதி மக்கள், வேளச்சேரி பாலத்தின் ஓரத்தில் வரிசையாக தங்களுடைய நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இப்போதும் அதைத்தான் செய்துள்ளனர்.