வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாந்த்ரீக சக்தி அதிகரிக்க 3 வயது சிறுமி நரபலி.. புதுக்கோட்டையில் மந்திரவாதி பெண் கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

மாந்த்ரீக சக்தி அதிகரிக்க 3 வயது சிறுமி நரபலி.. புதுக்கோட்டையில் மந்திரவாதி பெண் கைது


"ஆமாம்.. எனக்கு மாந்திரீக சக்தி அதிகமாகணும்னு நினச்சேன்.. அதான் கழுத்தை அறுத்தேன்.. கொலை செய்தேன்" என 3 வயது சிறுமியை நரபலி செய்த மந்திரவாதி பெண் தெரிவித்துள்ளார். இலுப்பூர் அடுத்த குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி வெள்ளைச்சாமி - முருகாயி. இவர்களது மகள்தான் 3 வயது ஷாலினி. கடந்த 26-ம் தேதி சாயங்காலம் தன் வீட்டு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டாள்.

ரத்த வெள்ளத்தில் சிறுமி
 அதனால் பதறி போன பெற்றோர், குழந்தையை தேட ஆரம்பித்தார்கள். எல்லா இடங்களிலும் தேடி கடைசியில் வீட்டிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த காட்டுப் பகுதியில் சிறுமி கழுத்தறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தங்களது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு கதறி அழுதனர்.
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
சின்னப்பொண்ணு
 தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து உடனடி விசாரணையில் இறங்கியதுடன், அதே பகுதியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்ற பெண் மந்திரவாதியை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அப்போதுதான் சின்னப்பொண்ணு கூறிய தகவல்களை கேட்டு போலீசார் உட்பட எல்லோருமே ஷாக் ஆகி நின்றார்கள்.


கழுத்தை அறுத்தேன்
 பெண் மந்திரவாதி இதுபற்றி சொன்னதாவது: "என்னுடைய மாந்திரீக சக்தி அதிகரிக்க வேணும்-னு நினைச்சேன். அதுக்காக 3-வயது சிறுமியை நரபலி கொடுத்தால் எனக்கு பலம் வந்துடும்னு கணக்கு போட்டேன். அதனால்தான் சிறுமியை அழைத்து கொண்டு போய் கழுத்தை அறுத்து கொலையும் செய்தேன்" என்றார் கூலாக.


ஷாக்கில் மக்கள்
 இதையடுத்து மந்திரவாதி பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு குழந்தையை இரக்கமின்றி துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற இந்த சம்பவமும், அதற்கு மந்திரவாதி பெண் கூறிய காரணமும் கேட்டு மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment