வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலைவாய்ப்பு - ரெயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலை - 220 பேருக்கு வாய்ப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 29, 2019

வேலைவாய்ப்பு - ரெயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலை - 220 பேருக்கு வாய்ப்பு

சென்னை ஐ.சி.எப்.-ல் ரெயில்பெட்டி தொழிற்சாலை செயல்படுகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்களை பயிற்சிப் பணியில் சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 


மொத்தம் 220 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பட்டதாரிகளுக்கு 100 இடங்களும், டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 120 இடங்களும் உள்ளன. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 30 இடங்களும், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 70 இடங்களும் உள்ளன. 
டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு 40 இடங்களும், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 80 இடங்களும் உள்ளன.
அப்ரண்டிஷிப் விதிமுறைக்கு உட்பட்ட வயது வரம்புடையவர்கள் பயிற்சி யில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி 6-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் என்ற இணையதளத்தில் 28-2-2019-ந் தேதி வெளியிடப்படும்.

No comments:

Post a Comment