வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மொட்டை மாடியில் கத்திக் குத்து.. ரத்த வெள்ளத்தில் மிதந்த 10ம் வகுப்பு மாணவன்.. - Thirumullaivayol Murder News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 28, 2018

மொட்டை மாடியில் கத்திக் குத்து.. ரத்த வெள்ளத்தில் மிதந்த 10ம் வகுப்பு மாணவன்.. - Thirumullaivayol Murder News

வீட்டின் மொட்டை மாடியில் பத்தாம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கத்தி குத்து காயங்களுடன் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் வேணு. கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் பாபு. 15 வயதாகிறது. அயப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இவர் நேற்று ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றிருக்கிறார் அப்போது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து மர்ம நபர்கள் 2 பேர் இந்த மாடிக்கு எகிறி குதித்து வந்தனர்.


16 இடங்களில் குத்து 
அங்கு நின்று கொண்டிருந்த பாபுவை திடீரென சரமாரியாக கத்தியால் 16 இடங்களில் குத்தினார்கள். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய பாபுவின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அங்கு குடியிருக்கும் எல்லோருமே மொட்டை மாடிக்கு வந்தனர்.


ரத்த வெள்ளம்
அப்போது அங்கு பாபு ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாபுவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் பாபுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


சிசிடிவி கேமரா  
மர்மநபர்கள் யார் என தெரியவில்லை. ஆனால் அவர்கள் வந்து போனது, அந்த் தெருவின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அவர்களின் முகமும் நன்றாக பளிச்சென காமிராவில் தெரிகிறது. இந்த காட்சியினை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்


காதல் பிரச்சனையா?
10-ம் வகுப்பு மாணவன் மீது இவ்வளவு கொலை வெறியா என அதிர்ச்சியாக உள்ளது. கொலைக்கு காரணம் முன்விரோதமா அல்லது ஏதேனும் காதல் பிரச்சினையா என்றெல்லாம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment