வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, June 08, 2023

ஆங்கிலத்தில் அளிக்கும் புகாரை பெற மறுப்பு..! கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் அடாவடி.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சில காவல் நிலையங்களையும், சென்னை மாநகர காவல் ஆணையரக காவல் நிலையங்கள் சிலவற்றையும் இணைத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் உருவாக்கப்பட்டது. 

கூடுவாஞ்சேரி சரகத்தில், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, போக்கு வரத்து புலனாய்வு பிரிவு, மகளிர் காவல் நிலையம் என, தனித்தனி காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன.

இதில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், முதலில் சிட்லப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக, கூடுவாஞ்சேரி சரகத்திற்கு பொத்தேரி ஜி.எஸ்.டி. , சாலையோரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

மேற்கண்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எந்த விபத்து ஏற்பட்டாலும், இவர்களே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காவல் நிலையத்தில், விபத்து தொடர்பான புகார்களை தமிழில் மட்டுமே அளிக்க வேண்டும் எனவும், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் புகார் அளித்தால், போலீசார் வாங்குவதில்லை எனவும், மக்கள் கூறுகின்றனர். இது குறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது: புறநகர் பகுதிகளான மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், ஐ. டி. , நிறுவனங்களில் பணிபுரிவோர், கல்லுாரிகளில் பயில்வோர் என, வெளிமாநிலங்களை சேர்ந்தோர் பரவலாக உள்ளனர். அதே போல, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பல மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன. 

இங்கு, விபத்தில் சிக்கும் வாகனங்கள் தொடர்பாக புகார் அளிப்போர், தங்களின் மொழிகள் அல்லது ஆங்கிலத்தில் புகார் அளித்தால், காவல் நிலையத்தில் இருப்போர், புகாரை தமிழில் எழுதி தர வேண்டும் என கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இதனால், தமிழ் தெரியாதோர் அவதிப்படுகின்றனர். 

பிறர் உதவியுடன் தமிழில் புகார் எழுதி கொடுக்கும்போது, அவர்களுக்கு புகாரில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த காவல் நிலையத்தில், ஆங்கிலத்தில் அளிக்கப்படும் புகார்களையும் பெற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, June 06, 2023

செங்கல்பட்டில் விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்...!

செங்கல்பட்டு நகரில் இந்திய விவசாய சங்கத்தின் சார்பில் தலைநகர் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கு நீதி வழங்கக் கோரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் வாசுதேவன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாசெ ஊனை பார்த்திபன் இராமலிங்கம் கருணாகரன் தயாளன் சண்முகம் சுரேஷ் பாரத் ராஜேந்திரன் ரவி மனோகர் ராம் பிரசாத் சரவணன் சேகர் சேக்பரித் ஏழுமலை ராபர்ட் தமிழ் பார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டு... அகற்றாமல் தையல் போட்ட செவிலியர்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்திருக்கும் உதயேந்திரம் பகுதியைச்சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன், வயது 45. இவர், நேற்று காலை மாதனூர் அருகே லாரியை ஓட்டிச் சென்றபோது, பின்னால்வந்த தனியார் பேருந்து மோதியது.


இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கிருந்தவர்கள் கார்த்திகேயனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பணிநேரத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், கார்த்திகேயனுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்த செவிலியர்களே தலையில் ஏடாகூடமாகத் தையல் போட்டு சாதாரண வார்டுக்கு மாற்றியிருக்கிறார்கள். அப்போதும் தையல் போடப்பட்ட தலைப் பகுதியிலிருந்து ரத்தம் வழிவது நிற்கவில்லை. அவருக்குத் தலையில் கடுமையான வலியும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால், அதிருப்தியடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீபுரம் மலைக்கோடி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 தனியார் மருத்துவர்கள் மீண்டும் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது. தையல் போடப்பட்ட இடத்தில் 'இரும்பு நட்டு' இருப்பதைக் கண்டு மருத்துவர்களும், கார்த்திகேயனின் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தையல் பிரிக்கப்பட்டு அந்த இரும்பு நட்டு அகற்றப்பட்டது.
இரும்பு நட்டு பாய்ந்திருக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்

`தொற்று காரணமாக அவருக்கு இரண்டு நாள்கள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையல் போட முடியும்' என்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே, கோபமடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் கேள்வியெழுப்பினர். 

அப்போதும் அவர்கள் உரிய பதில் அளிக்காமல், அலட்சியப்படுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாப்பாத்தி விசாரணை மேற்கொண்டுவருகிறார். மேலும், விரிவான விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் அரசு மருத்துவமனை தரப்பில்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் 


திருப்பத்தூர் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, June 05, 2023

சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்.. அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டிய டாக்டர் மீது வழக்கு..!

சென்னையில் இளம்பெண் ஒருவருடன் பழகி திருமணம் ஆசை காட்டி மோசடி செய்த மருத்துவர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை எண்ணூரைச் சேர்ந்த 28 வயது பட்டதாரி பெண்ணுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக சென்ற போது இளம்பெண்ணுக்கு அந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளாடைவில் இருவரும் நெருங்கி பழகத் தொடங்கியுள்ளனர்.


தொடர்ச்சியாக இருவரும் வாட்ஸ்ஆப் மூலம் சாட்டிங், வீடியோ கால், வெளியே லாங் டிரைவ் சென்று வந்த நிலையில் இந்த உறவு காதலாக மாறியுள்ளது. அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதி மொழி கொடுத்த மருத்துவர் நெருக்கமாக இருக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், சமீப காலமாக பெண்ணிடம் பேசுவதை அந்த மருத்துவர் திடீரென நிறுத்திய நிலையில் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் பெண் விசாரித்ததில் அந்த மருத்துவர் உறவை தொடர நாட்டம் காட்டவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவருக்கு தொடர்ந்து அழுத்தம் தந்துள்ளார். அப்போது அந்த மருத்துவர் தன்னிடம் நெருக்கமாக இருந்த அந்தரங்க புகைப்படங்கள் உள்ளன, அதை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என பிளாக்மெயில் செய்துள்ளார்.

விவகாரம் எல்லை மீறி போகவே அந்த பெண் தனது பெற்றோரிடம் இதை கூறியுள்ளார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதற்குள்ளாக அந்த மருத்துவர் வேறு ஒரு பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளம் பெண் தன்னிடம் இருந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள், ஆடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை போலீசாரிடம் ஆதராமாக தந்துள்ளார்.

தன்மீது பழிவந்துவிடக் கூடாது என போலீஸ் விசாரணையை முடக்க மருத்துவர் முயற்சிப்பதாகவும், அதற்காக இதுவரை சுமார் 10 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாகவும் பெண்ணின் தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் புகாரை தொடர்ந்து மருத்துவர் மீது மோசடி, ஏமாற்றுதல், மிரட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சென்னை மாவட்ட செய்திகள் 


சென்னை மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்