வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Government Job
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Government Job. Show all posts
Showing posts with label Government Job. Show all posts

Monday, February 02, 2026

என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு 50,000 ரூபாய் சம்பளம்! - BSNL job - Vil Ambu News

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் (BSNL job) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி டெலிகாம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை பார்க்கலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். நாடு முழுவதும் தகவல் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய தொலைத்தொடர்பு துறையின் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

BSNL job - பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை மத்திய அரசு நிறுவனம் என்பதால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை கிடைக்குமா? என்ற ஆர்வம் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கொடுக்கும். இந்தநிலையில்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். பணியிடங்ள் விவரம்: * சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி டெலிகாம்: 95 பணியிடங்கள் * சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி ஃபைனான்ஸ்: 25 பணியிடங்கள் என மொத்தம் 120 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி: சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி டெலிகாம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் என்ஜினியரிங் / அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி (ஃபைனான்ஸ்) பணிக்கு சிஏ மற்றும் காஸ்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 07.03.2026 அன்று தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு? சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி: ரூ.24,900 - 50,500/-வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.2,500 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.1250/- கட்டணம் ஆகும்.

* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள் - 05.02.2026 ஆகும். * விண்ணப்பிக்க கடைசி நாள் - 07.03.2026 ஆகும். * விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம்: 08.03.2026 முதல் 15.03.2026 ஆகும் * தேர்வு நடைபெறும் நாள் - 29.03.2026 ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bsnl.co.in/


Sunday, January 16, 2022

மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் 5-வது படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் அடங்கிய கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

 

ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு அலுவலகத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 08 கிராம உதவியாளர் பதவிகள் நிரப்பப்படவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tiruvallur.nic.in-யை பாடவையிடுவதன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த பதவிகளுக்கான விண்ணப்ப படிவத்தை ஜனவரி 20 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவிறக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சுயவிவரம் மற்றும் கல்வித்தகுதி சான்று மற்றும் சாதிச்சான்றுதல் ஆகியவற்றை திருவள்ளூர் வாட்டாச்சியர் அலுவலகத்திற்கு ஜனவரி 20-க்குள் கிடைக்குமாறு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம்.

வேலைவாய்ப்புக்காக முழு விவரம்:

  • நிறுவனத்தின் பெயர் - Revenue Department (tiruvallur)
  • பதவியின் பெயர் - கிராம உதவியாளர்.
  • காலியிடங்களின் எண்ணிக்கை - 08.
  • வேலை வகை - தமிழக அரசு வேலை.
  • பணியிடம் - கும்மிடிபூண்டி.
  • விண்ணப்பிக்கும் முறை - ஆஃப்லைன்.
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி - ஜனவரி 20, 2022.
  • அதிகாரபூர்வ இணையதளம் - https://tiruvallur.nic.in/.
  • அஞ்சல் முகவரி - tiruvallur Taluk Office, JN Road, NH716, Thiruvallur, Tamil Nadu - 602001.


கிராம உதவியாளர் பனிக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 01.01.2022-யின் படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி, SC/ST மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் 35 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பிழை இன்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

குறிப்பாக விண்ணப்பதாரர், திருவள்ளூர் மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு குறைந்த பட்சம் ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் இல்லை. மேலும் தகவலுக்கு கீழே உள்ள அரசின் அதிகாரப்பூர்வ அறிவிபின் லிங்கில் காணலாம்.
https://tiruvallur.nic.in/notice_category/recruitment/

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


முந்தைய வெலைவாய்ப்பு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, December 21, 2021

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் துணை இராணுவப் படையில் வேலை வாய்ப்பு.!

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் (SSB) படைப்பிரிவில் காலியாக உள்ள Sub Inspector (Armr) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சாஸ்த்ரா சீமா பால் (SSB)

மேலாண்மை : மத்திய உள்துறை அமைச்சகம்

பணி : Sub Inspector (Armr)

மொத்த காலியிடங்கள் : 22

கல்வித் தகுதி : மத்திய அல்லது மாநில அரசுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 52 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Commandant (Pers-II, Direct Seema Bal, East Block, V.R.K. Purar)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ssbrectt.gov.in என்னும் இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


முந்தைய வேலைவாய்ப்பு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, December 12, 2021

செங்கை மாவட்டத்தில் தேசிய வேளாண் திட்டத்தின்கீழ் மீன்கள் வளர்க்க விண்ணப்பங்கள் வரவேற்பு | National Agriculture Scheme Fishing | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பினை ஊக்குவித்தல் திட்டத்தில் பயனாளிகளால் ஏற்கனவே அமைக்கப்பட்ட 1000 ச. மீ. பரப்பளவில் உள்ள பண்ணைக்குட்டைகளில் செலவுதொகை ரூ. 62, 500-ல் 40 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.


பண்ணைக்குட்டைகளில் நீர் சேமிப்பு திறனை மேம்படுத்திட பாலித்தீன் விரிப்பு செய்து மீன் வளர்த்தல் திட்டம். பயனாளிகளால் ஏற்கனவே அமைக்கப்பட்ட 1000 ச. மீ. பரப்பளவில் உள்ள பண்ணைக் குட்டைகளில் பாலித்தீன் விரிப்பு செய்து மீன்வளர்ப்பு செய்திட ஆகும் மொத்த செலவினத்தொகை ரூ. 1, 87, 500-ல் 40 சதவீத மானியமாக வழங்கப்பட உள்ளது. விரால் மீன்வளர்ப்பினை ஊக்குவிக்கும் விதமாக இடுபொருள் மானியம் வழங்குதல் திட்டம், பயனாளிகளால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் விரால் மீன்வளர்ப்பு பன்ணைகளை ஊக்குவித்திட ஆகும் மொத்த செலவினத்தொகை ரூ. 75, 000ல் 40 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளர்க்கும் விவசாயிகளிடமிருந்து கீழ்க்காணும் திட்டங்களில் பயன்பெற வரவேற்கப்படுகிறது.


கல்குவாரிகளில் உள்ள நீர்நிலைகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன்வளர்த்தல், கல்குவாரிகளில் உள்ள நீர்நிலைகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன்வளர்த்திட பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம்) மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம்) வழங்கப்பட உள்ளது.

புதிய மின்வளர்ப்பு குளங்கள் 10 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்திட பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம்) வழங்கப்பட உள்ளது.

மீன்வளர்ப்பு குளங்களில் மீன்வளர்ப்பு செய்தல் மின்வளர்ப்பு குளங்களில் மீன்வளர்ப்பு செய்திட ஏதுவாக பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம்) வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மீன்வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறலாம். மீன்வளர்ப்பு திட்டங்களில் பயன்பெற விரும்பும் செங்கல்பட்டு, மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தை (கைப்பேசி எண்: 8489189720,

8489911333) தொடர்புகொண்டு வருகின்ற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குனர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, சென்னை - 600 115 (அலுவலக தொலைபேசி எண்: 044 - 24492719) என்ற அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டிருந்தது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Thursday, December 09, 2021

TNPSC NEWS: டி.என்.பி.எஸ்.சி பிரஸ் மீட்; தேர்வு தேதிகள் அறிவிப்பு | TNPSC Group 4 2022 Important Dates | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2022-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு்ளளது. இந்த அறிக்கையில், 2022-ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தகவல்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.


அரசு சார்ந்த ஊழியர்கள், பணியானர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுகின்றனர். இந்த வகையில் ஆண்டு தோறும் பல தேர்வுகள் நடத்தப்படுகிறன்றன.

கல்லூரி மாணவர்கள் தனியார் நிறுவசன ஊழியர்கள் என பலரும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளபப்டுவது குறித்து அரசு சார்பில் திட்ட அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி தற்போது 2021-ம் ஆண்டு இறுதிகட்டத்திற்கு வந்துள்ள நிலையில், 2022-ம் ஆண்டுக்கான அரசு பணி நியமனங்கள், போட்டித்தேர்வு மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்து திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குருப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வுகள் அறிவிக்கப்படும் என்றும், மார்ச் மாதம் குருப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் விஏஓ மற்றும் குருப் 4 தேர்வுகளில் தமிழ் தாளில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றும், கூடுதல் மதிப்பெண் பெற்றால் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போன்ற தேர்வுகள் நடத்தப்பட்வில்லை. இதனால்  அடுத்த ஆண்டில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் குரூப் 2 பிரிவில், 5831 பணியிடங்களும், குரூப் 4 பிரிவி்ல் 5258 பணியிடங்களும் காலியாக உள்ளது. தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு இந்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் தேர்வு அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Tuesday, December 07, 2021

அரசு வேலை | செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு | Govt Job in Chengalpattu District | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

மாவட்ட சுகாதார சங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பல்நோக்கு சுகாதார பணியாளர், மத்திய நிலை சுகாதார வழங்குநர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பு, பி. எஸ்சி நர்சிங், டி.ஜி.என்.எம் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக செங்கல்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்:  மாவட்ட சுகாதார சங்கம்

பணியின் பெயர்:  பல்நோக்கு சுகாதார பணியாளர், மத்திய நிலை சுகாதார வழங்குநர்

கல்வித்தகுதி:  12 ஆம் வகுப்பு, பி. எஸ்சி நர்சிங், டி.ஜி.என்.எம்

பணியிடம்:  செங்கல்பட்டு

தேர்வு முறை:  நேர்காணல்

மொத்த காலியிடங்கள்:  197

விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைனில் படிவம் பதிவிறக்கி நேரில் அனுகவும்

கடைசி தேதி:  15/12/2021

முழு விவரம்:  https://www.chengalpattu.nic.in/notice_category/recruitment என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


சமீபத்திய செய்திகள் 

Wednesday, April 21, 2021

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021 | Tamilnadu Housing Department Job Vacancies 2021 | Vil Ambu News | Tamil Latest News

டி.என்.ஹெச்.பி (TNHB) Tamil Nadu Housing Board நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.


தற்போதைய டி.என்.ஹெச்.பி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 22 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை டி.என்.ஹெச்.பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான டி.என்.ஹெச்.பி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 15 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.


டி.என்.ஹெச்.பி யின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் ஓட்டுநர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://tnhb.tn.gov.in/ என்ற டி.என்.ஹெச்.பி யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.



விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.



தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 02 பதவிகளுக்கான 15 காலியிடங்கள்

01.
டி.என்.ஹெச்.பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலியிடங்கள்


டி.என்.ஹெச்.பி நிறுவனமானது சமீபத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 28.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.


வேலை அறிவிப்பு

விவரங்கள்

நிறுவனம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

பணி

அலுவலக உதவியாளர்

கல்வி தகுதி

8 ஆம் வகுப்பு

வேலைக்கான இடம்

தமிழ்நாடு முழுவதும்

மாத வருமானம்

ரூபாய் 15,700 முதல் 50,000 வரை/ மாத வருமானம்

மொத்த காலியிடங்கள்

10

வயது வரம்பு

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இல்லை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

22.02.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி

28.02.2021


02.டி.என்.ஹெச்.பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள்

டி.என்.ஹெச்.பி நிறுவனமானது சமீபத்தில் ஓட்டுநர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 28.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு

விவரங்கள்

நிறுவனம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

பணி

ஓட்டுநர்

கல்வி தகுதி

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்கான இடம்

தமிழ்நாடு முழுவதும்

மாத வருமானம்

ரூபாய் 19,500 முதல் 62,000 வரை/ மாத வருமானம்

மொத்த காலியிடங்கள்

05

வயது வரம்பு

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இல்லை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

22.02.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி

28.02.2021

தேர்வு முறை:

நேர்காணல் வழி தேர்வு செய்யப்படும்

வயது வரம்பு

பொது பிரிவினர்- 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர்- 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆதி திராவிடர், பழங்குடியினர்- 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

வேலைக்கு தகுதியான நபர்கள் மற்றும் அரசு வேலை தேடுபவர்கள் டி.என்.ஹெச் பியின் அதிகாரபூர்வ வலைத்தளமான www.tnhb.tn.gov.in என்ற இணையத்தளத்தில் 22 பிப்ரவரி 2021 முதல் 28 பிப்ரவரி 2021 க்குள் விண்ணப்பிக்கலாம்.


பணிக்கான விதிமுறைகள்

  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்படும் மற்றும் காலியிடங்கள் பகிர்மானம் அடிப்படையில் செய்யப்படும்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் தவறான விவரங்கள் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • நேர்காணலின் அசல் சான்றிதழ்கள் நேர்காணல் அதிகாரியிடம் காண்பிக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
  • விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் வழங்கும் விவரங்களின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய பரிசீலனை செய்யப்படும். எனவே இணையதளத்தில் அல்லாது நேரில் காண்பிக்கும் மாறான விவரங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.