எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Chengalpattu District News. Show all posts
Showing posts with label Chengalpattu District News. Show all posts
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் செல்லும் சாலையில் எல்.என்.புரம் என்ற இடத்தில் செய்யூரில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்த வேனும் மதுராந்தகத்திலிருந்து செய்யூர் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்தில் பலி. ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலி.
மொத்தம் நான்கு பேர் இந்த விபத்தில் பலி ஆகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆண்கள். விபத்து குறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சில காவல் நிலையங்களையும், சென்னை மாநகர காவல் ஆணையரக காவல் நிலையங்கள் சிலவற்றையும் இணைத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் உருவாக்கப்பட்டது.
கூடுவாஞ்சேரி சரகத்தில், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, போக்கு வரத்து புலனாய்வு பிரிவு, மகளிர் காவல் நிலையம் என, தனித்தனி காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன.
இதில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், முதலில் சிட்லப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக, கூடுவாஞ்சேரி சரகத்திற்கு பொத்தேரி ஜி.எஸ்.டி. , சாலையோரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
மேற்கண்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எந்த விபத்து ஏற்பட்டாலும், இவர்களே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காவல் நிலையத்தில், விபத்து தொடர்பான புகார்களை தமிழில் மட்டுமே அளிக்க வேண்டும் எனவும், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் புகார் அளித்தால், போலீசார் வாங்குவதில்லை எனவும், மக்கள் கூறுகின்றனர். இது குறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது: புறநகர் பகுதிகளான மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், ஐ. டி. , நிறுவனங்களில் பணிபுரிவோர், கல்லுாரிகளில் பயில்வோர் என, வெளிமாநிலங்களை சேர்ந்தோர் பரவலாக உள்ளனர். அதே போல, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பல மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன.
இங்கு, விபத்தில் சிக்கும் வாகனங்கள் தொடர்பாக புகார் அளிப்போர், தங்களின் மொழிகள் அல்லது ஆங்கிலத்தில் புகார் அளித்தால், காவல் நிலையத்தில் இருப்போர், புகாரை தமிழில் எழுதி தர வேண்டும் என கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இதனால், தமிழ் தெரியாதோர் அவதிப்படுகின்றனர்.
பிறர் உதவியுடன் தமிழில் புகார் எழுதி கொடுக்கும்போது, அவர்களுக்கு புகாரில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த காவல் நிலையத்தில், ஆங்கிலத்தில் அளிக்கப்படும் புகார்களையும் பெற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு நகரில் இந்திய விவசாய சங்கத்தின் சார்பில் தலைநகர் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கு நீதி வழங்கக் கோரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் வாசுதேவன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாசெ ஊனை பார்த்திபன் இராமலிங்கம் கருணாகரன் தயாளன் சண்முகம் சுரேஷ் பாரத் ராஜேந்திரன் ரவி மனோகர் ராம் பிரசாத் சரவணன் சேகர் சேக்பரித் ஏழுமலை ராபர்ட் தமிழ் பார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்