வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆங்கிலத்தில் அளிக்கும் புகாரை பெற மறுப்பு..! கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் அடாவடி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, June 08, 2023

ஆங்கிலத்தில் அளிக்கும் புகாரை பெற மறுப்பு..! கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் அடாவடி.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சில காவல் நிலையங்களையும், சென்னை மாநகர காவல் ஆணையரக காவல் நிலையங்கள் சிலவற்றையும் இணைத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் உருவாக்கப்பட்டது. 

கூடுவாஞ்சேரி சரகத்தில், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, போக்கு வரத்து புலனாய்வு பிரிவு, மகளிர் காவல் நிலையம் என, தனித்தனி காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன.

இதில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், முதலில் சிட்லப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக, கூடுவாஞ்சேரி சரகத்திற்கு பொத்தேரி ஜி.எஸ்.டி. , சாலையோரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

மேற்கண்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எந்த விபத்து ஏற்பட்டாலும், இவர்களே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காவல் நிலையத்தில், விபத்து தொடர்பான புகார்களை தமிழில் மட்டுமே அளிக்க வேண்டும் எனவும், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் புகார் அளித்தால், போலீசார் வாங்குவதில்லை எனவும், மக்கள் கூறுகின்றனர். இது குறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது: புறநகர் பகுதிகளான மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், ஐ. டி. , நிறுவனங்களில் பணிபுரிவோர், கல்லுாரிகளில் பயில்வோர் என, வெளிமாநிலங்களை சேர்ந்தோர் பரவலாக உள்ளனர். அதே போல, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பல மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன. 

இங்கு, விபத்தில் சிக்கும் வாகனங்கள் தொடர்பாக புகார் அளிப்போர், தங்களின் மொழிகள் அல்லது ஆங்கிலத்தில் புகார் அளித்தால், காவல் நிலையத்தில் இருப்போர், புகாரை தமிழில் எழுதி தர வேண்டும் என கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இதனால், தமிழ் தெரியாதோர் அவதிப்படுகின்றனர். 

பிறர் உதவியுடன் தமிழில் புகார் எழுதி கொடுக்கும்போது, அவர்களுக்கு புகாரில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த காவல் நிலையத்தில், ஆங்கிலத்தில் அளிக்கப்படும் புகார்களையும் பெற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment