வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் தொகுதி MLA திரு.சு புகழேந்தி அவர்கள் மக்கள் நலனுக்காக டெல்லியில் கோரிகை மனு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 23, 2018

மதுராந்தகம் தொகுதி MLA திரு.சு புகழேந்தி அவர்கள் மக்கள் நலனுக்காக டெல்லியில் கோரிகை மனு




காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி MLA திரு.சு புகழேந்தி அவர்கள் தமது தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், அந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வலியுறுத்தியும் மாநிலங்களவை உறுப்பினர் திரு. சிவா அவர்களுடன் சேர்ந்து மத்திய தரைவழி போக்குவரத்து இணை அமைச்சர் திரு.மான்சுக் மாண்டவியா அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.




மேற்கண்ட விபத்துக்குரிய பகுதிகள் என்னவென்றால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புக்கத்துறை, படாளம், கக்கிலப்பேட்டை, அய்யனார்  கோயில் கூட்ரோடு போன்றவைகளாகும். இந்த பகுதிகளில் தினமும் சாலை விபத்துகளால் பொதுமக்கள் காயமடைவது மட்டுமல்லாமல், சில சமயங்களில் மரண நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

எனவே, குறிப்பிட்ட  பகுதிகளில்  மேம்பாலங்கள் அமைக்க  கோரி தி.மு.க-வை சார்ந்த MLA திரு.சு புகழேந்தி அவர்கள் பொதுமக்களுக்கான பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு புதுதில்லியில் நேரில் கோரிக்கை மனு அளித்தார்.



அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment