வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 17 வயசு பையன்.. 2 பிள்ளைகளின் தாய் செய்யும் வேலையா இது..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 22, 2018

17 வயசு பையன்.. 2 பிள்ளைகளின் தாய் செய்யும் வேலையா இது..



2 பிள்ளைகளை பெற்ற தாய் 17 வயசு பையனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் 2 பேரையுமே போலீசார் தேடி வருகிறார்கள். 


திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவன் பாலு. இவர் செய்யாறு அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். 
தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
 
கலசபாக்கம் அடுத்த பொற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமாவதி. இவருக்கு 27 வயதாகிறது. கல்யாணம் ஆகி ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.

அம்மா வீடு 
ஆனால் புருஷனுடன் சண்டை போட்டு கொண்டு பிரிந்து வந்துவிட்டார். அப்போது பெற்றெடுத்த இரண்டு குழந்தைகளையும் கணவனிடமே கொடுத்துவிட்டு, அம்மா வீட்டுக்கு கிளம்பி விட்டார். அம்மா வீட்டு தெருவில்தான் அந்த பாலுவின் வீடும் இருக்கிறது.


நம்பர் பரிமாற்றம்  
அதனால் அடிக்கடி தெருவில் பார்த்துகொண்டனர், சிரித்து கொண்டனர், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தனர், ஒருத்தருக்கொருத்தர் செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டு எந்நேரமும் போனிலேயே இருந்தனர்.

வீடு திரும்பவில்லை 
இந்நிலையில், கடந்த 11ம் தேதி காலேஜூக்கு சென்ற பாலு, திரும்பவும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பதட்டமான பெற்றோர், காலேஜூக்கு போன் செய்து, மகன் இன்னும் வீடு திரும்பவில்லை என்றனர்.


அக்கா வந்தாங்க.. 
அதற்கு கல்லூரி நிர்வாகிகள், "காலைலயே அவங்க அக்கா ஹேமாவதி வந்து கூட்டிட்டு போய்ட்டாங்களே, உங்க வீட்ல ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க, தம்பி வந்தாதான் பிரச்சனையை சரி பண்ண முடியும் என்று சொன்னாங்க. அதனால ஒரு லட்டர் எழுதி வாங்கி கொண்டு மாணவனை அனுப்பி வைத்தோம்" என்றனர். ஹேமாவதி பாலுவை தம்பி என்று சொல்லி அழைத்து சென்றதை அறிந்த பெற்றோர் ஷாக் ஆனார்கள்.

தேடி வருகிறார்கள்
உடனடியாக அனக்காவூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தார்கள். ஹேமாவதி என்பவர் யார் என்றே தெரியாது, தங்கள் மகனை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதால், எப்படியாவது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கதறினார்கள். இது சம்பந்தமான புகாரை பெற்று கொண்ட போலீசாரும் மாயமான 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment