வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கணக்கு டீச்சர் கடத்தல்.. காரை விட்டு டூவீலரில் மோதி கடத்திய துணிகரம்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 01, 2018

கணக்கு டீச்சர் கடத்தல்.. காரை விட்டு டூவீலரில் மோதி கடத்திய துணிகரம்..



கும்பகோணத்தில் பரபரப்பு இளம் பெண் கடத்தல் கும்பகோணம்: 
கும்பகோணத்தில் ஒரு ஆசிரியயை, அவரது டூவீலரில் காரை விட்டு மோதி கீழே விழ வைத்து பின்னர் கடத்திச் சென்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் லால் பகதூர் சாலையில் ஏஜேசி மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு கணக்கு ஆசிரியையாக பணியாற்றுபவர் காயத்ரி (31). 3 மற்றும் 4ம் வகுப்புகளுக்கு ஆசிரியையாக உள்ளார்.


நேற்று மாலை 5 மணிக்கு பள்ளியை விட்டு டூவீலரில் தனது வீட்டுக்குக் கிளம்பினார் காயத்ரி. அவரது வீடு அண்ணா நகரில் உள்ளது. அப்போது மகாமக குளம் அருகே நீல நிற குவாலிஸ் கார் ஒன்று காயத்ரி டூவீலரில் மோதியது.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதில் அவர் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது காரிலிருந்து இறங்கிய சிலர் காயத்ரியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர். தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த காயத்ரி குடும்பத்தினர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இப்புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரனையை தீவிரபடுத்தியுள்ளனர். கடத்தப்பட்ட ஆசிரியைக்கு திருமணம் ஆகவில்லை என்றும், காயத்ரியின் தாய் மீரா என்றும், தந்தை கிரிராசன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
காயத்ரியை கார்த்திக் என்பவர் கடத்திச் சென்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment