வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கட்டை பையில் பெண் குழந்தை.. விக்கித்து போன திருச்சி..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 12, 2019

கட்டை பையில் பெண் குழந்தை.. விக்கித்து போன திருச்சி..

தெருவில் இன்று விடிகாலை நடந்து கொண்டிருந்த ஷாஜகான், கட்டை பையிலிருந்து வந்த குழந்தை சத்தத்தை கேட்டதும் ஒரு கணம் விக்கித்து நின்றுவிட்டார்!!

திருச்சி கே.கே.நகர் காஜாமலை முஸ்லீம் 2-வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவருக்கு வயது 47. இன்று காலை 5.30 மணிக்கு அவரது தெருவில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அப்போது, திடீரென ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதே தெருவில் பேராசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பிருந்து அழுகை சத்தம் வந்ததால் அங்கே அருகில் சென்று பார்த்தார். அப்போது ஒரு கட்டை பையில் இருந்து சத்தம் வந்ததால், அதை திறந்து பார்த்தார். 

அப்போது, பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையை ரோட்டில் கொண்டு வந்து யாரோ போட்டிருப்பதை அறிந்த ஷாஜகான் உடனடியாக கே.கே.நகர் போலீசுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசாரும் குழந்தையை பத்திரமாக மீட்டனர். ரோஸ் கலரில் கண்ணை கூட முழுசா திறக்க முடியாத அந்த பெண் குழந்தை பார்க்க அந்த பகுதி மக்கள் கூடிவிட்டார்கள். மீட்கப்பட்ட குழந்தையை கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவை குழந்தைகள் மையத்தில் பத்திரமாக போலீசார் ஒப்படைத்தனர். யார் கொண்டு வந்து குழந்தையை போட்டிருப்பார்கள், குழந்தை யாருடையது என்றெல்லாம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment