வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பொள்ளாச்சியில் மீண்டும் இரத்த வெறியாட்டம்: அரைநிர்வாணமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 07, 2019

பொள்ளாச்சியில் மீண்டும் இரத்த வெறியாட்டம்: அரைநிர்வாணமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி!



பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், பலாத்காரம் செய்யப்பட்டு அரை நிர்வாணமாக சாலையோரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக பெரிய சர்ச்சை ஒன்று எழுந்து அதற்கான தீவிரமான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துடியலூரை சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.




இந்த இரு சம்பவங்களால் தமிழகமே பெரும் பரபரப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் பிரகதி என்பவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.


நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற பிரகதி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பிரகதியின் பெற்றோர் இன்று காலையில் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் ரோட்டில் முட்புதருக்குள் பிரகதி அரைநிர்வாணமாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலை செய்த நபர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment