வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இலங்கையில் 25 வருடங்களாக பிச்சை எடுக்கும் 65 வயது பெண்ணொருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 3 ஆடம்பர வீடுகள்,வங்கியில் கணக்கில் பல இலட்சம் ரூபா பணம் | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, July 07, 2019

இலங்கையில் 25 வருடங்களாக பிச்சை எடுக்கும் 65 வயது பெண்ணொருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 3 ஆடம்பர வீடுகள்,வங்கியில் கணக்கில் பல இலட்சம் ரூபா பணம் | Run World Media

இலங்கையில் 25 வருடங்களாக யாசகம் பெற்ற பெண்ணொருவரின் சொத்து மதிப்பு தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. கம்பஹா நகரிலுள்ள ரயில் நிலையங்களில் 25 வருடங்களாக யாசகம் பெற்று வந்த பெண்ணுக்கு பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

65 வயது பெண்ணுக்கு சொந்தமாக 3 வீடுகள் உள்ளதாகவும், அவரது வங்கிக் கணக்கில் பல இலட்சம் ரூபா பணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த யாசகம் பெறும் பெண் ரயில்வே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளது.


யாசகம் பெறுவது தனது மகள்களுக்கும் தெரியும் என்றும், அவரது மருமகன்கள் நல்ல வேலைகளில் இருப்பதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். வயோதிப பெண் கைது செய்யப்பட்ட நிலையில் மகள்களில் ஒருவர் வந்து அவரை பார்த்துச் சென்றதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


கம்பஹா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் யாசம் பெறும் அவர், நாள் ஒன்றுக்கு சுமார் 4000 ரூபாவும் மாதத்திற்கு 150,000 ரூபா பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 25 வருடங்களாக யாசகம் பெற்ற பணத்தில் 3 வீடுகளையும் கட்டியதாகத் தெரிவித்துள்ளார். அவற்றில் 2 வீடுகளை அவரது மகள்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மூன்றாவது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன் அவரது வங்கிக் கணக்கில் ஐந்து இலட்சம் ரூபா பணம் இருப்பதும், தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment