வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மனைவியை பிரிந்து திருங்கையுன் வாழ்கை: டிக்டாக் வீடியோவால் வசமாக சிக்கிய கணவன்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, July 02, 2019

மனைவியை பிரிந்து திருங்கையுன் வாழ்கை: டிக்டாக் வீடியோவால் வசமாக சிக்கிய கணவன்!

காதல் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு திருநங்கனையுடன் கணவர் வாழ்கை நடத்தி வந்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தெரியாமல் கணவன் மாயமாகிவிட்டதாக நினைத்து உள்ளார் அவரின் மனைவி.



இந்நிலையில், அவர் செய்த டிக்டாக் வீடியோவில் திருங்கனையுடன் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் திருங்கையுடன் ஒன்றாக வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது தற்போது அதிர்ச்சியடைந்துள்ளார்.


கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்: 
 விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்பவரும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடந்த 2013ம் ஆண்டு சுரேஷ் என்பருக்கும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.



மாயமானார் சுரேஷ்:
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு வீட்டை விட்டு சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. கணவரை பல இடங்கிளல் தேடியும் சுரேஷின் மனைவி ஜெயபிரமா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.




3 ஆண்டாக சுரேஷை தேடிய போலீசார்: 
இந்நிலையில் கடந்த 3 ஆண்டாக சுரேஷனை விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட்டது.


திருநங்கையுடன் டிக்டாக் வீடியோ:  
இந்நிலையில், மாயமான சுரேஷ் திருநங்கையுடன் ஜோடியாக வீடியோ பதிவிட்டு இருப்பதை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்திருந்தார். இதை பார்த்த ஜெயப்பிரதாவின் உறவினர்கள், இதுகுறித்து, ஜெயப்பிரதாவிடம் அந்த வீடியோவை காட்டியுள்ளனர்.


 உடனே இந்த தகவலை தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷிடம் ஜெயபிரதாவின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து விழுப்புரம் திருநங்கை அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகளிடம் போலீசார் விசாரித்ததில், வீடியோவில் இருப்பவர் ஓசூரில் இருக்கும் திருநங்கை என்று கண்டறிந்தனர்.


திருநங்கையுடன் பழக்கம்:
அதன் பிறகு ஓசூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய போலீசார் சுரேஷ் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்ததை வந்ததை தெரிந்துக்கொண்டனர். இதனையடுத்து அங்கு இருந்து சுரேஷை மீட்டு வந்த காவல்துறையினர், மனைவி ஜெயபிரதாவிடம் சேர்த்து வைத்தனர்.


தொடர்ந்து சுரேசிடம் விசாரணை செய்ததில் தான் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும் அப்போது சில திருநங்கைகள் உடன் ஏற்பட்ட பழக்கத்தினால் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.




No comments:

Post a Comment