எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
மூன்றில் ஒருவர் இரவில் நன்றாகத் தூங்குவதில்லை. பெரும்பாலானவர்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியம். சிலருக்கு அதைவிட குறைந்த நேரம் போதும்.
உங்கள் உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை முதலில் அறியுங்கள். அவ்வளவு நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள்.
தொடர்ந்து போதிய தூக்கமில்லாமல் இருந்தால் அது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும். உடல் பருமன், நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை இதனால் உண்டாகும்.
நன்றாகத் தூங்கினால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன நலமும் மேம்படும். நீரிழிவுக்கான வாய்ப்புகள் குறையும். பாலியல் வாழ்க்கையும் சிறக்கும்.
ஒரு நாள் சரியாகத் தூங்காவிட்டால், மறுநாள் அதிகம் தூங்குங்கள். பல மாதங்கள் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், மீண்டு வரவே சில வாரம் தேவை.
வெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளை உடலுறவுக்கு வாடகைக்கு விடும் நிலையங்கள் அதிகரித்து வருகிறது. சிலிக்கானால் செய்யப்பட்ட இந்த பொம்மைகள் ஒரிஜினல் பெண்கள் போன்று இருப்பதாலும் செக்ஸின்போது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதாலும் அதிக நபர்கள் இதனை வாடைகை எடுத்து செல்லும் வழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இத்தாலியில் கடந்த ஒன்பது நாட்களுகு முன் ஒருவர் செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடும் கடை ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பித்த ஒன்பதே நாட்களில் போலீசார் இந்த கடையை ரெய்டு செய்து கடையை இழுத்து சீல் வைத்ததோடு கடை ஓனரையும் கைது செய்தனர்.
செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடும் அந்த நபர் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரிடம் சென்று வந்த பின்னர் சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருந்ததாகவும், இதனால் இந்த பொம்மையை பயன்படுத்துபவர்களுக்கு தொற்று வியாதி வருவதற்கு வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டதால் அவரது கடைக்கு சீல் வைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
முருங்கை கீரையில் வைட்டமின் ஏ வைட்டமின் பி1, பி2, பி3, பி6 கால்சியம் பொட்டாசியம் இரும்பு சத்து பாஸ்பரஸ் ஜின்க் மெக்னீசியம் அத்துடன் இதில் மிக குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது.
பல வியாதிகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறைகளில் இருந்தே குணப்படுத்த முடியும். ஆராய்ச்சியில் புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை இலைகளுக்கு உண்டு என கண்டறிந்துள்ளனர்.
கல்லீரலை சுத்தம் செய்யும். நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அழிக்கும். எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தும்.
தினமும் முருங்கை கீரையின் சாற்றை 300 மிலி. குடித்து வந்தால் புற்றுநோய் கட்டிகளை எளிதில் உடலில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி. எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலிமையாக்கி வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. இதில் உள்ள நியாஸிமிஸின் என்ற மூல பொருள் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் செல்களை சிறிது சிறிதாக அழிக்கவும், செல்கள் வளர்ச்சியை முற்றிலுமாக தடை செய்கிறது.
உங்கள் தோல் சார்ந்த அனைத்திற்கும் ஒரு மிக சிறந்த மருந்து முருங்கையே. முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால், உங்கள் சருமத்தை எப்போதும் சுத்தமாகவும், கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கலாம்.
மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் பங்கேற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த கல்லூரி மாணவிகள் சிலரின் துப்பட்டாவை போலீசார் பறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்ட அரசு விழா ஒன்றில் மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா விஷ்வ வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருசில மாணவிகள் கருப்பு நிற துப்பட்டாவை அணிந்திருந்தனர். இந்த துப்பட்டாவை முதல்வர் பேசும்போது மாணவிகள் கருப்புக்கொடி காட்ட பயன்படுத்துவார்கள் என கருதிய போலீசார் துப்பட்டாவை பறித்து வைத்து கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும் தருவதாக கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவிகளின் துப்பட்டாவை போலீசார் பறித்தது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மபி மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காவல்துறையினர்களின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என பாஜக எம்.எல்.ஏ தெரிவித்திருந்தார்.
இந்த விஷயத்தில் களத்தில் இறங்கி போராட பெண்கள் அமைப்புகளும் திட்டமிட்டு வருகின்றன.
கோவையை சேர்ந்த கல்லூரி நிர்வாகி அங்கு பணிபுரியும் இளம் பெண்களுடன் கூத்தடிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அறையில் அவர் காத்திருக்க, அங்கு அவரும் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து அவர் கூத்தடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அவர் கோவையில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன்(64) எனவும், அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
மொத்தம் 2 வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டிலும் இருப்பது ஒரு பெண்தானா? இல்லை வேறு வேறானவர்களா என்பது தெரியவில்லை. அந்த நபர் இளம்பெண்களுடன் ஜல்ஷா செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள் வறுமையின் காரணமாக சானிட்டரி நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு வைத்துக்கொள்கின்றனராம்.
கென்யாவில் உள்ள கிராமங்களில் நாப்கின் எளிதாக கிடைப்பதில்லை. அதோடு அதை வாங்க மேற்கொள்ளும் பயணத்திற்கும் பணமில்லை, போக்குவரத்தும் இல்லை. எனவே, கிராமத்தில் இருந்து வெளியே போகும் டிரைவர்களிடம் உடலுறவு வைத்துக்கொண்டு, அவர்களை நாப்கின் வாங்கி வரும் படி கூறுகின்றனர். இந்நிலையில், இதற்கு முடிவு கொண்டுவர கென்யா அரசும், யுனிசெப்பும் சேர்ந்து இந்த பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
ஈரோட்டில் போதை ஆசாமி ஒருவர், 13 வயது சிறுவனை வெறி கொண்டு விரட்டி விரட்டிக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு நேதாஜி சாலைக்கும், கச்சேரி சாலைக்கும் இடையே உள்ள பூக்கடையில் சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வேலை பார்த்து வருகிறார்.. கொல்லம்பாளையம் ரயில்வே காலனி பள்ளியில் படிக்கும் சிறுவன் பள்ளி விடுமுறையின்போது பூக்கடையில் பகுதி நேரமாக வேலைபார்த்து வந்துள்ளார்.
நேற்று சிறுவன் பூக்கடையில் வேலையில் இருந்தபோது, மதியம் சுமார் 3.30 மணியளவில் தள்ளாடியபடி போதை ஆசாமி ஒருவர் சிறுவனை நோக்கி வந்திருக்கிறார். திடீரென சிறுவன் மீது பாய்ந்த அந்த ஆசாமி, சிறுவனை கீழே தள்ளிவிட்டு கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் கடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள், ஓடிவந்து அந்த போதை ஆசாமியை நையப் புடைத்து, அவனிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றியியுள்ளனர். சிறுவனின் உடலில் இருந்து ரத்தம் கொட்டியதைக் கண்டு கோபமடைந்த பொதுமக்கள், ஆத்திரம் தாங்காமல் அந்த ஆசாமியை விரட்டிப் பிடித்து அடித்துள்ளனர்.
அதுவரை தெளிவாக இருந்த போதை ஆசாமி, பொதுமக்கள் அடிக்கவும் திடீரென மயக்கம் அடைந்ததைப் போல் நடு ரோட்டில் படுத்து பாவனை செய்ய ஆரம்பித்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத மேலும் ஒரு பயங்கரம் அரங்கேறியது. அதுவரை மயங்கிக் கிடந்தவனைப் போல நடித்த அந்த ஆசாமி, திடீரென எழுந்து, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவரை கீழே தள்ளி கடிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்து சுற்றி நின்றிருந்த கூட்டம் தெரித்து ஓடியது. இளைஞரைக் காப்பாற்ற முன்வந்த மேலும் சிலரையும், அந்த ஆசாமி ஆக்ரோஷத்துடன் கடித்துக் குதற முயற்சி செய்தார். ஒரு வழியாக அந்த ஆசாமியின் கையையும், வாயையும் கட்டி சாலையோரம் படுக்க வைத்தனர். அதன்பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போதை ஆசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த போதை ஆசாமி ஈரோடு பூந்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
ரகளை செய்த போதை ஆசாமி, மதுபானத்தோடு வேறு சில போதை வஸ்துக்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவ்வளவு சம்பவமும் ஈரோடு எஸ்.பி அலுவலகத்துக்கு அருகே நடைபெற்றது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இந்த சம்பவத்துக்குப் பிறகாவது, ஈரோட்டில் தாராளமாகப் புழங்கும் போதை வஸ்துக்களையும், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்றவற்றையும் ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எச் ராஜா தலைமறைவா.. எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா என செய்தித்தாளை காண்பித்து பாஜக நிர்வாகி ஒருவர் போலீஸுக்கே சவால் விடும்படி பேசினார்.
புதுக்கோட்டையில் திருமயம் என்ற பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயத்துக்கு பக்கத்தில் மேடை போட போலீஸார் அனுமதி தரவில்லை. இதனால் எச் ராஜா வெகுண்டெழுந்தார்.
இதையடுத்து போலீஸாரை மிகவும் கேவலமாக விமர்சனம் செய்தார். அப்போது உயர்நீதிமன்றம் உத்தரவு நாங்கள் என்ன செய்ய என கேட்ட போலீஸாரை ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது என்றதோடு கெட்ட வார்த்தையும் பேசினார்.
தலைமறைவு
இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதாலும் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டதாலும் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
பண்ணை வீட்டில் உலா
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் அவரது பண்ணைவீட்டில் இருந்து காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9-ஆவது வீதியில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி
விநாயகர் சதுர்த்தி விழா
இதையடுத்து அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடந்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார்.
கண்ணுக்கு தெரியுதா
அப்போது ஒரு செய்தித்தாளில் 'தலைமறைவானார் எச் ராஜா' என்ற முதல் செய்தியை காண்பித்து பாஜக நிர்வாகி ஒருவர் போலீஸாருக்கு சவால் விடும் தொனியில் பேசினார். அவர் கூறுகையில் எச் ராஜா தலைமறைவா, எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா. உன் கண்ணுக்கு தெரியுதா.
சவால் விட்ட பாஜக நிர்வாகி
இந்துக்களின் ஒருங்கிணைந்த ஒரே குரல் எச் ராஜாதான். அவர் சிங்கம் மாதிரி இங்க உட்காந்திருக்காரு, தலைமறைவுனு போட்டு இருக்கீங்களே உங்களுக்கு அசிங்கமாக இல்லையா. லட்சக்கணக்கான தொண்டர்கள் இங்க இருக்கோம். எங்கள் உயிர்களை தாண்டிதான் உங்களால் எச் ராஜாவை கைது செய்ய முடியும் என்று பேசினார்.
18 லட்சம் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மக்களுக்காகவே திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவர் ஜெயலலிதா. மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கியவர் ஜெயலலிதா.
அவர் வகுத்த பாதையில் செயல்படும் இந்த அரசு, 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்த முடிவுகளை ஆராய்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான திருத்திய ஊதிய விகிதங்கள், படிகள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள் ஆகியவற்றை உயர்த்தி வழங்க அமைக்கப்பட்ட அலுவலர் குழு, 2017-ன் பரிந்துரைகள் அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1-10-2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது 1-1-2016 முதல் திருத்திய ஊதியம் பெறும் மத்திய அரசு அலுவலர்களுக்கு 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக 2 சதவீதம் அளித்து, தற்பொழுதுள்ள 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் பல்தொழில் நுட்பப்பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4,500 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ.2,250 வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.
சிறப்பு ஊதிய அட்டவணையில் ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த்துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சிச்செயலாளர் கள், எழுத்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும்.
இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜூலை, 2018 முதல் ஆகஸ்டு, 2018 வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், செப்டம்பர் 2018 (இந்த மாதம்) முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.1,157 கோடியாக இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
"மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக நான் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாத்திரையை போட்டுக் கொண்டு மாதவிலக்கை தள்ளிப்போட்டேன்" என்கிறார் 27 வயது கல்யாணி. இவர் வீடுகளில் வேலை செய்து வாழ்க்கை நடத்துபவர்.
கல்யாணிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடவுள் பக்தி, பூசை, புனஸ்காரம் என மிகவும் ஆசாரமானவர் கல்யாணியின் மாமியார்.
கல்யாணியின் வீட்டில், அவரைத் தவிர பிற பெண்கள் அனைவருமே கைம்பெண்கள். எனவே, பண்டிகை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பூஜைக்கான வேலைகளை செய்ய தகுதி படைத்த ஒரே நபராக கருதப்படும் கல்யாணிதான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும்.
இதுபோன்ற சூழலில், கல்யாணிக்கு மாதவிடாய் வந்தால், குடும்பத்தினர், அவரை கடுமையாக கடிந்துக் கொள்வர்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர், மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரையை பயன்படுத்தலாம் என்பது தெரியவந்தபோது கல்யாணிக்கு கிடைக்கும் ஏச்சும் பேச்சும் நின்றுபோனது; ஏனெனில் இயற்கையாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாயை அவர் வலுக்கட்டாயமாக நிறுத்த துணிந்துவிட்டார்.
பாரம்பரிய சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் கடைபிடித்தாலும், கல்யாணியின் குடும்பம் மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கான மாத்திரையை பயன்படுத்துவதற்கு தடை சொல்லவில்லை என்பதைவிட வரப்பிரசாதமாகவே நினைத்தது.
ஆனால், பிற நோய்கள் எதுவாயிருந்தாலும், கை வைத்தியத்தையே சிபாரிசு செய்யும் குடும்பங்கள்கூட இந்த மாத்திரைகளை பயன்படுத்த ஊக்குவிப்பது என்பது, வழிபாடு, சடங்குகளின் மீது பொதுமக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
"தொடர்ந்து சில மாதங்கள் நிறைய பண்டிகைகள் வரும் காலம். ஆசாரமான எங்கள் குடும்பத்தில் குளிக்காமல் ஒரு பொருளை தொடுவது, சமைப்பது, பூஜை செய்வது போன்ற விஷயங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
அதோடு, நான் வேலை பார்க்கும் வீடுகளிலும், பண்டிகைக் காலங்களில் வேலை அதிகமாக இருந்தாலும், மாதவிடாய் காலத்தில் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.
அவர்கள் பார்வையில் அவர்களின் எண்ணம் சரிதான். கடவுள் விசயத்தில் எப்படி பொய் சொல்வது? எனவே இந்த விசயத்தில் நாங்கள் பொய் சொல்லமாட்டோம்.
வேலைக்கு போகாவிட்டால் எனது சம்பளமும் குறையும். எல்லாவிதத்திலும் எனக்கு பிரச்சனை கொடுக்கும் இந்த மாதவிடாயை தவிர்ப்பதற்காக நான் ஏன் மாத்திரையை பயன்படுத்தக்கூடாது?" என்று கேள்வி எழுப்புகிறார் கல்யாணி.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பண்டிகைக் காலம், நீண்டுக் கொண்டே செல்லும். தீபாவளிக்கு பிறகு ஒரு மாதம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் தொடங்கிவிடும்.
"பண்டிகைக் காலங்களில், அதிலும் குறிப்பாக ஆவணி, புரட்டாசி மாதங்களில் பல பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரையை வாங்கிச் செல்வார்கள். நாளொன்றுக்கு 10-15 அட்டை மாத்திரைகள்", என்கிறார் மருந்துக் கடை வைத்திருக்கும் ராஜூ.
அவரது கருத்துப்படி, நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும் இந்த மாத்திரை அமோகமாக விற்பனையாகிறது.
'மாசு', 'தீட்டு' 'சுத்தமின்மை' போன்ற பல காரணங்களால் பெண்கள் மாதவிடாய் மாத்திரைகளை அதிகளவில் வாங்குகின்றனர்.
இன்னமும் மாதவிடாய் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசத் தயங்கும் இந்தியாவில் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருப்பது கவலை ஏற்படுத்துகிறது.
படத்தின் காப்புரிமைBSIP/GETTY IMAGES
மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும்கூட பெண்கள் வீட்டின் வெளிப்புறத்தில் ஒதுக்குப்புறமாக தங்கவைக்கப்படுவதும், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை தனியாக ஒதுக்கி வைத்து யாரும் அதைத் தொடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நடைமுறைகளும் தொடர்கின்றன.
வீட்டிற்குள் இருக்க நேர்ந்தாலும், அவர்களை தீண்டத்தகாதவர்களாகவே நடத்துவதும், அவர்களுக்கு தட்டு, படுக்கை, போர்வை, தலையணை எல்லாம் தனியாக கொடுத்து, ஒதுக்கி வைத்துவிட்டு, மாதவிடாய் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து அவர்கள் பயன்படுத்திய பொருட்களை புனிதப்படுத்துவதையும் மறுக்க முடியாது.
மாதவிடாய் சமயத்தில் பண்டிகைக் காலத்தில் பூசைகளில் கலந்துக் கொள்வதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்படுகிறது, அந்த சமயத்தில் அவர்கள் கோயில்களுக்குள் செல்ல முடியாது.
படத்தின் காப்புரிமைPRAKASH MATHEMA/AFP/GETTY IMAGES
இந்த மாத்திரைகளை உட்கொண்டால் பக்க விளைவுகள் உண்டா?
"இந்த மாத்திரைகளை வாங்குவதற்காக வரும் பெண்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு கொண்டு வருவதில்லை. பொதுவாக இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு மருத்துவரை ஆலோசிப்பதும் இல்லை. மூன்று மாத்திரைகள் சாப்பிட்டாலே மாதவிடாய் தள்ளிப்போகும் என்றாலும், ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஏழு அல்லது எட்டு மாத்திரைகளை பெண்கள் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் ராஜூ.
இந்த மாத்திரைகளை உட்கொண்டால் பக்க விளைவுகள் உண்டா? என்ற கேள்விக்கு, இந்த மாத்திரைகளை உட்கொள்வதற்கு எந்தவொரு மருத்துவரும் பரிந்துரைக்க மாட்டார்கள் என்கிறார், சஹயாத்ரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் கெளரி பிம்ப்ரால்கர்.
"மாதவிடாய் சுழற்சியானது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் என்ற இரண்டு ஹார்மோன்களை சார்ந்தது.
மாதவிடாயை தாமதப்படுத்துவதற்கு இந்த ஹார்மோன் மாத்திரைகளை எடுக்க வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உங்கள் ஹார்மோன் சுழற்சியை மாற்றுகின்றது என்பதுதானே பொருள்? "
"இந்த ஹார்மோன் மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
இதுபோன்ற பல பெண்களை நான் பார்க்கிறேன். 10-15 நாட்களுக்கு மாதவிடாயை தாமதப்படுத்துவதற்காக பெண்கள் அதிக அளவிலான மருந்தை உட்கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது" என்கிறார் மருத்துவர் கெளரி.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
யார் இந்த மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது?
மாதவிடாயை தள்ளிப்போடுவதற்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள் மருத்துவரை ஆலோசனை செய்வதேயில்லை. "மருந்துக்கடைகளில் எளிதாக இந்த மாத்திரைகள் கிடைப்பதால், தேவையில்லை என்றாலும் அற்ப காரணங்களுக்காகவும், இதன் கடுமையான விளைவுகளை தெரிந்துக் கொள்ளாமல் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்”. என்கிறார் மருத்துவர் கெளரி.
இந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன், அந்த பெண்ணின் மருத்துவ பின்னணியையும் கணக்கில் கொள்ள வேண்டும். தலைவலி, ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும், பருமனான பெண்களும் கண்டிப்பாக இந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது.
விளையாட்டு வீராங்கனைகளின் நிலை என்ன?
விளையாட்டுப் போட்டிகளின்போது மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக வீராங்கனைகள் இந்த மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் உடல்நலனை பாதிக்காதா?
"விளையாட்டு வீராங்கனைகளின் நிலையே வேறு. அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டும், சத்தான உணவை உட்கொண்டும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. அதுமட்டுமல்ல, அவர்கள் தொடர்ந்து இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதில்லை.
ஆனால் மத நம்பிக்கைகளுக்காக இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களின் நிலையும், உடல் ஆரோக்கியமும் வேறு," என்கிறார் கெளரி.
'மாதவிடாயின் போதும், நான் விநாயகர் பூசைகளை செய்கிறேன்'
மாதவிடாய் காலத்தில் வீட்டிற்கு வெளியே தள்ளப்படும் பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கிராமங்களில் அதிகம் என்பதோடு, மத நம்பிக்கைகளுக்காக மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரைகளை சாப்பிடுவர்களின் எண்ணிக்கையும் கிராமங்களில் அதிகமாகவே இருக்கிறது.
"மாதவிடாய் காலத்தில் பூஜை செய்யாதே என்றோ அல்லது மத வழிபாடுகளை செய்யக்கூடாது என்றோ சொல்லவில்லை. எனவே மூட நம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் தங்கள் உடலை வருத்திக் கொண்டு, ஆபத்துக்கு உட்படுத்திக் கொள்ளக்கூடாது" என்கிறார் மருத்துவர் கெளரி.
ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு பிரபலமான திருப்தி தேசாய் என்பவரும் மருத்துவர் கெளரியின் கருத்தையே வழிமொழிகிறார்.
"மாதவிடாய் என்பது தீட்டோ, தீண்டத்தகாததோ அல்ல. இதை ஓர் இயல்பான நிகழ்வான ஏற்றுக் கொள்ளவேண்டும். மத நம்பிக்கைகளுக்காகவும், சடங்குகளுக்காகவும் அதை தள்ளிப்போடுவது முற்றிலும் தவறானது.
எனக்கு மத நம்பிக்கை இருக்கிறது, மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோயில்களுக்கு செல்கிறேன், மாதவிடாயை காரணம்காட்டி எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளமுடியாது என்று நான் சொல்லமாட்டேன். மாதவிடாய் என்றாலே தீட்டு, மாசு என்ற எண்ணத்தை மாற்றவேண்டும்" என்கிறார் திருப்தி தேசாய்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
தர்மசாத்திரங்களில் எங்குமே மாதவிடாயை தீட்டு என்று குறிப்பிடவேயில்லை என்று கூறுகிறார் பஞ்சாங்கம் எழுதும் டி.கே.சோமன்.
"பழங்காலத்தில் மாதவிடாயின்போது பெண்கள் வீட்டின் மூலையில் தனியாக அமர வைக்கப்பட்டதற்கு காரணம் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும், ஒட்டு மொத்தமாக சுகாதாரத்தை மேம்படுத்தவும்தான். இன்றைய சூழலில் அதற்கான தேவையில்லை.
இன்று பெண்கள் தனியாகவும் வசிக்கும் நிலையில், தெய்வத்திற்கு உணவு படைக்க வேண்டும் என்றால் அதை யார் சமைப்பார்கள்?
அந்த பெண்ணே செய்யலாம்… கடவுளுக்கு படைக்கும்போது அந்த உணவில் துளசி அல்லது தர்பைப்புல்லை போடுவோம். எனவே அதில் பாதகமில்லை. அதேபோல் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வழிபாடுகள் செய்யலாம்" என்கிறார் சோமன்.
"கடவுள் என்பவர் மனிதர்கள் மீது கோபம் கொள்வதில்லை என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். எனவே தவறான புரிதலால் பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரைகளை பயன்படுத்தி உடலை கெடுத்துக் கொள்ளக்கூடாது" என்கிறார் சோமன்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்நிலை பொறுப்பு வகிக்கும் மேகா என்ற பெண், தான் பல முறை மத ரீதியிலான காரணங்களுக்காக மாத்திரைகளை பயன்படுத்தியிருப்பதாகவும், ஆனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்பட்டதில்லை என்றும் கூறுகிறார்.
"மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூஜை செய்யக்கூடாது என்ற கருத்து எனக்கும் ஏற்புடையதல்ல. ஆனால், என் மாமியாருக்கு அந்த நம்பிக்கை இருப்பதால், அவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தே நான் மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னர் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன்" என்கிறார் மேகா.
மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரைகள் பக்கவிளைவை ஏற்படுத்துமா இல்லையா என்பது விவாதத்தின் பிரதான கருப்பொருள் அல்ல. ஆனால், தங்களது ஆரோக்கியத்தை பணயம் வைத்து பெண்கள் மத ரீதியிலான மூட நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டுமா என்பதே நம் முன் இருக்கும் பிரம்மாண்டமான சவால்!