திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி கோவில் வீதியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்குபோலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 4 பெண்களை மீட்ட போலீசார் , பணம் ஸ்வைப்பிங் மெஷின் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர்.
அப்போது அங்கிருந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ரோஹித், கோழிக்கோட்டைச் சேர்ந்த முபாஷிர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்டேன்ஸ் வீதியில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவி என்பவர் மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருவதும் அதன் நிர்வாகத்தை ரோஹித்தும் முபாஷிரும் கவனித்து வந்ததும் தெரியவந்தது.
அங்கு தொழில் அதிபர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் வந்ததால் அவர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்த் இருவரும் திட்டமிட்டதும் தெரிய வந்தது . அந்த வகையில் கொங்கணகிரி வீதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் பாலியல் தொழிலை மேற்கொண்டு வந்த போது போலீசாரிடம் சிக்கினர்.
மீட்கப்பட்ட பெண்களில் இருவர் கெரளாவையும் ஒருவர் கர்நாடகத்தையும், ஒருவர் தமிழகத்தையும் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. ரோஹித், முபாஷிர் ஆகியொரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூரில் சிக்கிய மூன்று பெண்களுமே ஹைடெக் விபச்சாரிகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment