Actres Molested – சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் இளம்பெண்களை வாய்ப்பு தருவதாக கூறி சினிமா துறையினர் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. மும்பையில் உள்ள சார்கோப் பகுதியில் வசித்து வரும் மாடல் அழகி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். இவருக்கு முந்த்ராசிங் நாகர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
தன்னை தயாரிப்பாளராக அறிமுகம் செய்து கொண்ட அவர் , திரைப்படம் தொடர்பாக பேச வேண்டும் என தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு கரன் வாஹி என்பவரை இசையமைப்பாளர் என அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதன்பின் சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவரது படத்தில் உதவி இயக்குனர் வாய்ப்பு தருவதாக கூறிய அவர் நடிகைக்கு விருந்து வைத்துள்ளார்.
அதன்பின் நடிகை எழுந்து சமையலைறை பக்கம் சென்ற போது பின்னால் சென்ற தயாரிப்பாளர் அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேற முயன்ற போது மயக்கமடைந்தார். அதன்பின் இரவு முழுவதும் அந்த தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் அப்பெண்ணை விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
விடிந்த பின் தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்த அப்பெண், காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். எனவே, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், நடிகைக்கு அளித்த உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்கள் இருவரும் கற்பழித்தது தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment