வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Child Sexual Abuse
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Child Sexual Abuse. Show all posts
Showing posts with label Child Sexual Abuse. Show all posts

Sunday, December 19, 2021

கொடுமை.! விளையாடச் சென்ற 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 14 வயது சிறுவன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அப்போது வீட்டில் யாருமில்லை. அங்கு சிறுமியிடம் சிறுவன் அத்துமீறியுள்ளான்.


இதையடுத்து சிறுமி கூச்சலிடவே, சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமி நலமாக உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Sunday, November 14, 2021

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கரூர் மருத்துவர் | Karur Doctor Child Abuse sexually | 17 Age Girl Abused in Karur by Doctor | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

கரூரில் தனது மகளை பிரபல மருந்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை காசாளர் புகார் செய்துள்ளார். இதையடுத்து மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனை மேலாளர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர், கரூரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அப்புகாரில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் மருத்துவர் ரஜினிகாந்த் நேற்று மாலை தனது மகளை தனது அறைக்கு வரச்சொல்லி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தூர்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பொன்னரசியின் மகளை மருத்துவமனை மேலாளர் மூலம் அழைத்துச் சென்று மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்த், மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலாளரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.