வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Seeman News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Seeman News. Show all posts
Showing posts with label Seeman News. Show all posts

Sunday, December 19, 2021

நாம் தமிழர் நிர்வாகிக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை | திருப்பி அனுப்பப்பட்ட 400 பேர்- என்ன காரணம்.?

சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.



இந்தியாவை சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அதிலும் சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள்.

தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழர்களின் முதல் தேர்வாக இருக்கும் வெளிநாடு சிங்கப்பூர் அல்லது மலேசியாதான். தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் அமைச்சர்களாக உள்ளனர். கலாச்சராக ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சிங்கப்பூர் - தமிழ்நாடு நெருங்கிய தொடர்பு கொண்டது.

இந்த நிலையில் திருவாரூரைச் சேர்ந்த குமார் (25) என்ற இளைஞருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது. இவருக்கு வாழ்நாள் தடை விதித்து இந்தியாவிற்கு நாடு கடத்தியது சிங்கப்பூர் அரசு. இனி அவர் சிங்கப்பூர் செல்ல முடியாது.

பொதுவாக சிங்கப்பூர் அரசு தமிழர்களுக்கு எதிராக இப்படி நடவடிக்கை எடுக்காது. தமிழர்களை இருகரம் கூப்பி வரவேற்கும் நாடுதான் சிங்கப்பூர். ஆனால் திருவாரூரைச் சேர்ந்த குமார் இப்போது வாழ்நாள் தடை பெற்றுள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

சிங்கப்பூர் சென்ற இவர் நாம் தமிழர் கட்சி பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். நாம் தமிழர் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை சிங்கப்பூர் அரசு கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து இவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, தற்போது வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் கடந்த சில காலமாகவே முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. அங்கு நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து பிரச்சாரங்களை செய்வதால் நாம் தமிழருக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுவரை நாம் தமிழர் நிர்வாகிகள் 400 பேர் அங்கிருந்து திருப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படவில்லை. இப்போதுதான் முதல்முறையாக குமார் என்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி வாழ்நாள் தடை பெற்றுள்ளார்.

இது தொடர்பாக சிங்கப்பூர் தூதரகத்தில் நாம் தமிழர் கட்சி ஏற்கனவே முறையீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்பே நிர்வாகிகள் திருப்பி அனுப்பப்பட்ட போது நாம் தமிழர் கட்சி சிங்கப்பூர் தூதரகத்தில் முறையீடு செய்துள்ளது. ஆனால் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Tuesday, April 13, 2021

சீமான், தினகரன், கமல் போடும் கணக்கு இதுதான்! | தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் | Seeman, Kamalhasan, TTV Dinakaran Calculation after Election | Vil Ambu News | Tamil Latest News

தேர்தலுக்கு பின் நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் என்ன மனநிலையில் உள்ளன என்பது இதோ...!

2021 சட்டமன்றத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவியது. திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு இடையேதான் போட்டி என்றாலும் சீமான், தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பதை தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் கூறுகிறது.

சீமான் தொடர்ந்து தனியாகவே களம் கண்டு வருகிறார். முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யமும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.

தமிழகம் முழுக்கவே இளம் வாக்காளர்கள் கணிசமாக சீமான் பக்கம் சாய்ந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த முறை நாம் தமிழர் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களைப் பெறாவிட்டாலும் 40 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகள் வரை பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தினகரன் எஸ்டிபிஐ, தேமுதிக, ஓவைசி கட்சி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். இருப்பினும் தினகரன் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, கணிசமான வாக்குகள் பெறக் கூடிய தொகுதிகள் எவை என தரம் பிரித்துள்ளார்

அந்த வகையில் கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்தூர், குன்னூர், பொள்ளாச்சி, காரைக்குடி, உசிலம்பட்டி, திருவாடானை ஆகிய 10 தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை தினகரன் தரப்பு அதிகம் எதிர்பார்க்கிறது என்கிறார்கள்.

அதேபோல் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து அக்கட்சியும் தகவல்களைப் பெற்று வருகிறது. கமல்ஹாசன் நகர்ப்புறங்களில் உள்ள இளம் வாக்காளர்கள், மாற்று அணியை எதிர்பார்க்கும் நகர்ப்புறங்களைச் சார்ந்தோரிடம் வாக்குகளைப் பெறுவார் என கூறுகிறார்கள்.

ஆனால் கிராமப்புறத்தில் கமல்ஹாசனுக்கு வாக்குகள் இல்லை என்கின்றனர். அதனாலே அவர் பல இடங்களில் பிரச்சாரத்தையும் தவிர்த்துவிட்டு கோவையில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார். இதனால் கோவை தெற்கு உறுதியாக தங்களுக்கு கிடைக்கும் என்றும், மேலும் கோவையைச் சுற்றியுள்ள சில தொகுதிகள் சென்னையில் மயிலாப்பூர், மதுரவாயல் ஆகிய தொகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு வருவோம் என கூறுகின்றனர்.